இராவணன் அங்கதன் உரையாடல் |
| 6993. | நின்றவன் தன்னை, அன்னான் நெருப்பு எழ நிமிரப் |
| பார்த்து, 'இங்கு, |
| இன்று, இவண் வந்த நீ யார்? எய்திய கருமம் |
| என்னை? |
| கொன்று இவர் தின்னாமுன்னம் கூறுதி, தெரிய' |
| என்றான்; |
| வன் திறல் வாலி சேயும், வாள் எயிறு இலங்க |
| நக்கான். |
| |
நின்றவன் தன்னை - (குறுக வந்து) (தன் முன்) நின்றவனான அங்கதனை; அன்னான் - இராவணன்; நெருப்பு எழ நிமிரப் பார்த்து - விழிகளில் தீப்பொறி சிந்த நிமிர்ந்து நோக்கி; இங்கு இன்று இவண் வந்த நீ யார்?- 'இன்று இவ்விடத்தில் என்முன் வந்துள்ள நீ யார்? எய்திய கருமம் என்னை? - நீ கருதி வந்த காரியம் என்ன?இவர் கொன்று தின்னா முன்னம்- இங்குள்ள பணியாளர்கள் உன்னைக் கொன்று தின்று விடுவதற்கு முன்பாக; தெரியக் கூறுதி என்றான்- விளக்கி உரைப்பாயாக என்று கேட்டான்; வன்திறல் வாலி சேயும் - வலிய ஆற்றல் மிக்க வாலியின் மகனான அங்கதனும்; வாள் எயிறு இலங்க- வெள்ளிய பற்கள் ஒளிருமாறு; நக்கான்- இராவணனைப் பார்த்துச் சிரித்தான். |
அழையாமல் அங்கதன் நுழைந்திருப்பதும், மிக அருகில் நெருங்கி நிற்பதும், முன் வந்து சென்ற அனுமனைப் போலக் குரங்குருவில் முன் நிற்பதும் இராவணன் நெருப்பெழ நிமிர்ந்து பார்த்தற்குக் காரணங்கள் ஆயின. |
(20) |
அங்கதன் தன்னை யாரென அறிவித்தல் |
| 6994. | 'பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப் |
| பூமேல் |
| சீதை நாயகன், வேறு உள்ள தெய்வ நாயகன், |
| நீ செப்பும் |
| வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், |
| தான் விட்ட |
| தூதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்' |
| என்றான். |