அல்லாமல் திருமாலோ? மற்று அயன் கொல் ஆம்?- இவர்கள் இருவரும் அல்லாமல் நான்முகனோ?என்பார் - (நீ கூறிய பூத நாயகனாக முதலாய) புகழுக்குரிய தலைவன்; அன்றி - (உன் தலைவன் அவர்களைப் போல்) அல்லாமல்; குரங்கு எலாம் கூட்டி - குரங்குகளையெல்லாம் படையென்று திரட்டிக்கொண்டு;வேலைக் குட்டத்தைச் சேது கட்டி - சிறு குட்டை போன்ற ஒரு கடற்பகுதியில் அணைகட்டி; இரங்குவான் ஆகில் இன்னம் அறிதியென்று- (அதனை ஒரு வீரச் செயலாகவும் அதனால் தன்னை வீரனாகவும் கருதி) இந்த நிலையிலும் இராவணன் செய்ததற்கு இரங்குகின்றானா? என்று அறிந்து வா' என்று; உன்னை ஏவும் - உன்னைத் தூதனாக ஏவியுள்ள; நரன் கொலாம்- அந்த மனிதன் தானோ?; உலக நாதன் - உலகத்திற்கு நாயகன்? என்று கொண்டு - என்று சொல்லிக்கொண்டே; அரக்கன் நக்கான் - இராவணன் எள்ளிச் சிரித்தான். |
(22) |
| 6996. | 'கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து |
| நேமி |
| சங்கமும் தரித்த மால், மற்று இந் நகர்தன்னைச் |
| சாரார்; |
| அங்கு அவர் தன்மை நிற்க, மனிசனுக்காக, |
| அஞ்சாது, |
| இங்கு வந்து இதனைச் சொன்ன தூதன் நீ |
| யாவன்?' என்றான். |
| |
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் - கங்கையாற்றையும் பிறை நிலவையும் சடையிற் சூடியுள்ள நெற்றிக கண்ணனான சிவபெருமான்; கரத்து நேமி சங்கமும் தரித்த மால்-தன் கரங்களில் சக்கரமும் சங்கும் தாங்கிய திருமால் மற்று இந்நகர் தன்னைச் சாரார்- (ஆகிய இருவரும்) இந்த இலங்கை நகருக்குள் (அச்சத்தால்) வரமாட்டார்கள்; அங்கு அவர்நிலமை நிற்க- அவ்வாறு அவர் நிலமையேயிருக்கையில்; மனிசனுக்காக அஞ்சாது- (கேவலம்) |
மனிதன் ஒருவனுக்காக இவ்விலங்கைக்குள் அச்சமின்றித் துணிந்து; இங்கு வந்து - என் (அத்தாணி) மண்டபத்திற்குள் நுழைந்து; இதனைச் சொன்ன- இந்த வார்த்தைகளைக் கூறிய; தூதன் நீ- தூதனாகிய நீ; யாவன்? என்றான்- யார்? என்று கேட்டான் இராவணன். |
(23) |