| சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் |
| பெற்றேன்; |
| ஏது எனக்கு அரியது?' என்றான்--இறுதியின் |
| எல்லை கண்டான். |
| |
இறுதியின் எல்லை கண்டான்-வாழ்வின் இறுதி எல்லையைக் கண்டு கொண்டிருப்பவனாகிய இராவணன், (அங்கதனைப் பார்த்து); தாதையைக் கொன்றான் பின்னே- உன் தந்தை வாலியைக் கொன்ற இராமன் பின்னால்; இருகை தலைசுமந்துநாற்றி - இரு கரங்களையும் தலைமேல் குவித்துக்கொண்டு (தலை) கவிழ்ந்து; பேதையன் என்ன - (மானமற்ற) அறிவிலி என்று (கண்டோர் நகைக்குமாறு); வாழ்ந்தாய் என்பதோர் பிழையும் தீர்ந்தாய் - வாழ்கின்றாய் என்கின்ற உன் பழி (என்னிடம் வந்ததால்) தீரப் பெறுவாய்; சீதையைப் பெற்றேன் - (நீ என்னை அடைந்தால்) சீதையை நான் அடைந்துவிட்டவனும் ஆவேன்; உன்னைச் சிறுவனும் ஆகப் பெற்றேன் - உன்னை என் புதல்வனாகவும் பெற்றுக் கொண்டவன் ஆவேன்; எது எனக்கு அரியது?-எனக்கு இனி அரிய செயல்கள் என்று (உலகில் சில) உண்டோ? என்றான். |
(26) |
| 7000. | 'அந் நரர் இன்று, நாளை, அழிவதற்கு ஐயம் |
| இல்லை; |
| உன் அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி, ஊழி |
| காலம்; |
| பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி |
| செய்ய, |
| மன்னவன் ஆக, யானே சூட்டுவென், மகுடம்' |
| என்றான். |
| |
அந்நரர் - "அந்த மனிதர்கள்"இன்று நாளை- இன்றோ நாளையோ; அழிவதற்கு ஐயம் இல்லை- இறந்தொழிந்து போவதற்குச் (சிறிதும்) ஐயமே இல்லை; உன் அரசு- (பிறனுக்குத் தரப்பட்டுள்ள) உன்னுடைய அரசப் பொறுப்பினை; உனக்குத் தந்தேன் -(நான்) உனக்கு (இன்று) தந்து விட்டேன்; ஊழிக்காலம் ஆளுதி - யுக முடிவுக்காலம் வரையிலும் அதனை ஆளுவாயாக; அரி சுமந்த பொன்பீடத்து- சிங்கங்கள் சுமக்கும் பொன் ஆசனத்து; தேவர்கள் போற்றி செய்ய- தேவர்கள் போற்றிப் புகழ்ந்து |