பக்கம் எண் :

612யுத்த காண்டம் 

வணங்குமாறு; மன்னவன் ஆதி- நீ வானர அரசன் ஆவாயாக;
யானே
மகுடம் சூட்டுவென்-நானே (என் கரங்களால்) உனக்கு
மணிமுடி சூட்டி வைப்பேன் என்றான்.
 

இப்பாடலில்  அங்கதனுக்கு    ஆசையூட்டும் இராவணனின்
திறம்  காண்க. யானே-ஏகாரம் பிரிநிலை. தந்தேன்-துணிவு  பற்றி
வந்த காலவழுவமைதி.
 

(27)
 

7001.

அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை

தாக்கி,

துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க, 

நக்கான்;

' "இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே" என்பது

உன்னி,

உங்கள்பால்நின்றும் எம்பால் போந்தனன், உம்பி'

என்றான்.

 

அங்கதன் அதனைக்கேளா- அங்கதன் இராவணனின் அந்த
வார்த்தைகளைக் கேட்டு; அங்கையொடு அங்கைதாக்கி-அழகிய
தன் கையோடு கையை அடித்து; துங்கவன் தோளும் மார்பும் -
தன் தூய தோள்களும் மார்பும்; இலங்கையும் துளங்க  நக்கான்
- இலங்கை மாநகரும்   குலுங்குமாறு (பேரொலியிட்டுச்)   சிரித்து;
இங்கு நின்றார்கட்கு எல்லாம்
- இந்த இலங்கை  நகரில் வாழும்
அனைவர்க்கும்; இறுதியே என்பது உன்னி- இறுதி அழிவு உறுதி
என்பதை    நினைத்துத்தானே;   உங்கள்    பால்   நின்றும்-
உங்களிடத்திலிருந்து    விலகி;   உம்பி - உன்  தம்பி வீடணன்;
எம்பால் போந்தனன்
- எங்கள் பக்கம் வந்தடைந்தான் என்றான்.
 

அங்கையொடு   அங்கை  தாக்கல்-எள்ளலின்   வெளிப்பாடு.
தோளும் மார்பும் குலுங்கச் சிரித்தான் என்பது இயல்பு.   ஆயின்
இலங்கையும்   குலுங்கச்   சிரித்தான்    என்பது கம்ப முத்திரை.
அங்கதன் சிரித்தான்; இலங்கை நடுங்கியது என்பது குறிப்பு.
 

(28)
 

7002.

'வாய் தரத்தக்க சொல்லி, என்னை உன்

வசஞ்செய்வாயேல்,

ஆய்தரத் தக்கது அன்றோ, தூது வந்து அரசது

ஆள்கை?