பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 613

நீ தரக் கொள்வென் யானே? இதற்கு இனி நிகர் 

வேறு எண்ணின்,

நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசு!' என்று

நக்கான்.

 

வாய்தரத்தக்க  சொல்லி  -  வாயில்  வந்த சொற்களைக்
கூறி; என்னை உன் வசம் செய்வாயேல் - என்னை  நீ  உன்
வயப்படுத்துவதற்கு   முனைந்தால்;  தூது   வந்து அரசு அது
ஆள்கை
-  தூதனாக வந்தவன்   அரசினை  ஆட்சி செய்வது;
ஆய்தரத்தக்கது
  அன்றோ? -  (இதுவரை நடந்துள்ளதா என)
ஆராயத்தக்கதோர்  அரிய   செயல்  அன்றோ? நீ தர யானே
கொள்வேன்? 
- (வானர  ஆட்சியை)  நீ தர நானா ஏற்பேன்?
இதற்கு
- இச்செயலுக்கு;  இனி  நிகர் வேறு எண்ணில் - இனி
வேறோர் ஒப்புக் கூற எண்ணினால்; நாய் தர - (ஒரு) நாயானது
கொடுக்க; நல் அரசு  சீயம்  கொள்ளும் - ஒரு நல்ல அரசைச்
சிங்கம் ஏற்றுக்  கொள்வதை  ஒக்கும்; என்று நக்கான்- என்று
சிரித்தான் (அங்கதன்)
 

(29)
 

7003.

'அடுவெனே' என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன்,

'அந்தோ!

தொடுவெனே, குரங்கைச் சீறிச் சுடர்ப் படை?'

என்று, தோன்றா

நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்குத் தூத!

படுவதே துணிந்தாய்ஆகில், வந்தது பகர்தி'

என்றான்.

 

 அடுவனே என்னப் பொங்கி- (இவனைக்) கொல்லவே
போகிறேன் என்று  வெகுண்டு; ஓங்கிய அரக்கன் - எழுந்த
இராவணன்; அந்தோ!- ஐயோ! குரங்கைச் சீறி சுடர்ப்படை
தொடுவெனே
  -  (ஓர் அற்பக்)  குரங்கின் மேல் கோபித்து
வாளைத்   தீண்டுவேனோ; என்று- என்றெண்ணி; தோன்றா
நடுவனே
  செய்யத்தக்க- கட்புலனாகாத  இயமனே இறுதி
செய்யக்கூடிய; நாள்   உலந்தோர்க்குத்  தூத! - வாழ்நாள்
முடிவெய்தியவர்கட்குத்   தூதனாக    வந்தவனே!  படுவதே
துணிந்தாய்
ஆகில்- (அந்த இராம இலக்குவர்களோடு) நீயும்
அழிவது என்று முடிவு செய்து விட்டாயாகில்; வந்தது பகர்தி
என்றான்
- நீ  வந்த  காரியத்தை   உரைப்பாயாக என்றான்
(இராவணன்)
  

(30)