மாமுரசு அறைந்த- (வானரச் செயல் இவ்வாறாக) (இலங்கையில்) பெரிய முரசங்கள் முழக்கப்பெற்றன; ஆனைப் பதாகையால் - யானைகளின் மீது விளங்கிய பெரிய கொடிகளால்; நெடுவான் அகம் மறைந்த - நீண்ட விண்ணிடங்கள் மறைந்தன; தூளி குழுமி - தூசுகள் திரண்டு; மாதிரம் குறைந்த- திக்குள் சுருங்கினவாகத் தோன்றின; ஆங்கு- அங்கே; அவர் போர்க்குப் எழும் ஓதை- அந்த அரக்கர்கள் போருக்குப் புறப்படும் ஓசையானது; விண்ணூடு புக்கு உறைந்தது - ஆகாயத்தில் சென்று நிலைபெற்றது. |
(16) |
| 7033. | கோடு அலம்பின; கோதை அலம்பின; |
| ஆடல் அம் பரித் தாரும் அலம்பின; |
| மாடு அலம்பின, மா மணித் தேர்; மணி |
| பாடு அலம்பின, பாய் மத யானையே. |
| |
கோடு அலம்பின- சங்கங்கள் முழங்கின; கோதை அலம்பின-(அரக்கர்கள் மார்பில் அணிந்திருந்த) ஆரங்கள் ஒலித்தன; ஆடல் அம்பரித் தாரும் அலம்பின- (போர் முரசு கொம்பு முதலியவற்றின் ஒலிக்கேற்ப) ஆடிச்செல்லும் அழகிய குதிரைகளின் கிண்கிணி மாலைகளும் ஒலித்தன; மாமணித் தேர் மணிமாடு அலம்பின- பெரிய அழகிய தேர்களில் கட்டப்பட்டுள்ள மணிகள் பக்கங்களில் ஒலித்தன; பாய்மத யானை பாடு அலம்பின- பெருகுகின்ற மதத்தினையுடைய யானைகள் (போர் கிடைத்தது என்ற மகிழ்ச்சியால்) பிளிறின. |
(17) |
வானர சேனையும் அரக்கர் சேனையும் பொருதல் |
| 7034. | அரக்கர் தொல் குலம் வேர்அற, அல்லவர் |
| வருக்கம் யாவையும் வாழ்வுற, வந்தது ஓர் |
| கருக் கொள் காலம் விதிகொடு காட்டிட, |
| தருக்கி உற்று, எதிர் தாக்கின-தானையே. |
| |
அரக்கர் தொல்குலம் வேர் அற- அரக்கர்களின் தொன்மை வாய்ந்த குலம் வேரொடு அழியுமாறும்; அல்லவர் - அரக்கர் அல்லாத தேவர், மானிடர் முதலியோருடைய; வருக்கம் யாவையும் வாழ்வுற- இனம் எல்லாம் வாழ்வு பெறுமாறும்; வந்தது ஓர் கருக்கொள் காலம் கொடு- விதி காட்டி வந்ததாகிய ஒரு |