பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 631

காரணத்தைத் தன்னுள்ளே   பொதிந்து வந்த காலத்தை; விதி
காட்டிட- ஊழ்வினை காட்டியதால்; தானை - வானர சேனை
அரக்கர் சேனையும்; தருக்கி உற்று எதிர்தாக்கின- பெருஞ்
செருக்கோடு   நெருங்கி  எதிர்  எதிராக   (ஒன்றையொன்று)
தாக்கிக் கொண்டன.
 

(18)
 

7035.

பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும்,

கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல். 

வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள 

எல் கொடும் படையும் கொண்டது--இக் கடல். 

 

அக்கவியின்  கடல்-  அந்தக்  கடல் போன்ற வானரச்
சேனையானது; பல்கொடும் -  பற்களைக்கொண்டும்; நெடும்
பாதவம் பற்றியும் - பெரிய   மரங்களைக் கொண்டும்; கல்
கொடும் -  கற்களைக்  கொண்டும்;  சென்றது- (எதிர்க்கச்)
சென்றது; இக்கடல்- இந்தக் கடல்     போன்ற    அரக்கர்
சேனையோ;   வில்   கொடும் -  விற்களைக்   கொண்டும்; 
நெடுவேல் கொடும்
- நீண்ட வேல்களைக் கொண்டும்; வேறு 
உள எல்கொடும் படையும் கொண்டது
-மற்றும் உள்ள ஒளி 
மிக்க படைக்கருவிகளையும் கொண்டு சென்றது. 
 

(19)
 

7036.

அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம் 

கொம்புடைப் பணை கூறு உற நூறின; 

வம்புடைத் தட மா மரம் மாண்டன, 

செம் புகர்ச் சுடர் வேல்-கணம் செல்லவே. 

 

அம்பு கற்களை அள்ளின - அரக்கர் விட்ட அம்புகள்
(வானர  வீரர்கள்  வீசிய)  குன்றுகளைத்  தூளாக்கின; அம்பு 
எலாம்
- அந்த  அம்புகளையெல்லாம்; கொம்புடைப்பணை
(வானரர வீசிய) கொம்புகளோடு கூடிய மரங்களின் கிளைகள்; 
கூறு உற நூறின
- துண்டாகும்படி பொடியாக்கின; செம்புகர்-
(உதிரம் தோய்தலால்) செந்நிறப் புள்ளிகள் தோன்றும்படி; சுடர்
வேல்கணம்  செல்ல -  ஒளிர்கின்ற  வேலின்   தொகைகள்
பாய்தலால்; வம்பு  உடைத்தட மாமரம் -  மணமுடைய மிகர்
பெரிய மரங்கள்; மாண்டன - அழிந்து வீழ்ந்தன.