பக்கம் எண் :

632யுத்த காண்டம் 

அள்ளுதல்-கைப்பற்றுதல்; இங்கு அழித்தலைக் குறித்தது.
கொம்பு - சிறுகிளை.  பணை - பெருங்கிளை. ஆகுபெயரால் 
மரத்தைக் குறித்தது எனினுமாம்.
 

(20)
 

7037.

மாக் கை வானர வீரர் மலைந்த கல் 

தாக்கி, வஞ்சர் தலைகள் தகர்த்தலால், 

நாக்கினூடும், செவியினும், நாகம் வாழ் 

மூக்கினூடும், சொரிந்தன, மூளையே. 

 

மாக்கை வீரர்- பெரிய கைகளையுடைய வானர வீரர்கள்;
மலைந்த கல் - போரில்  வீசிய  கற்கள்; தாக்கி -  மோதி;
வஞ்சர் தலைகள் தகர்த்தலால்- வஞ்சகராம் அரக்கர்களின்
தலைகளைப்   பிளப்பதால்;   நாக்கின்   ஊடும் -   அந்த
அரக்கர்களின்   வாய்  வழியாகவும்;  செவியினும்  -  காது
வழியாகவும்; நாகம்வாழ் மூக்கின் ஊடும் -  நாகப்பாம்புகள்
வசிக்கின்ற   மூக்கு   வழியாகவும்;   மூளை   சொரிந்தன-
(அவர்கள்) மூளைகள் வெளிப்பட்டன.
 

வானரவீரர்களின்  கரங்கள்  மலைகளைப்   பெயர்க்கவும்
ஏந்தவும்  வல்ல   வலிமை     வாய்ந்தனவாதலின் "மாக்கை"
என்றார். நாக்கு ஆகுபெயராய்  வாயைக்  குறித்தது.  நாக்கும்,
மூக்கும், வாயும் தலையில் தொளைகள் உள்ள உறுப்புகளாதலின்,
அத்தொளைகள்   வழியே     அழுத்தப்   பெற்ற   மூளைகள்
வெளிவந்தன.
 

(21)
 

7038.

அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம்

விற்கள் ஓடு சரம் பட, வெம் புணீர் 

பற்களோடும் சொரிதர, பற்றிய 

கற்களோடும் உருண்ட, கவிகளே. 

 

அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம் - இருளும் (அஞ்சி)
ஓடவல்ல  (கருமை) நிறம் உடைய அரக்கர்களுடைய;விற்கள்-
விற்களிலிருந்து;  ஓடுசரம் பட- விரைந்து வருகின்ற அம்புகள்
பட்டதனால்;  வெம்புண்நீர் - கொதிக்கின்ற  புண்களிலிருந்து
சொட்டும் உதிரம்; பற்களோடும்  சொரிதர-  பற்களோடும்
வெளியே விழ;  பற்றிய  கற்களோடும் -  (அரக்கர்  மேல்
வீசக் கொண்டு வந்த  கரங்களில்)   கற்களைப்   பிடித்தவாறு;
கவிகள்   உருண்ட-   குரங்குகள்   (களத்தில்)   (வீழ்ந்து)
உருண்டன. 
 

(22)
 

7039.

நின்று மேரு நெடு மதில் நெற்றியின்

வென்றி வானர வீரர் விசைத்த கல்