| சென்று, தீயவர் ஆர் உயிர் சிந்தின, |
| குன்றின் வீழும் உருமின் குழுவினே. |
| |
மேரு நெடுமதில் நெற்றியின் - மேருமலை போன்று உயர்ந்த மதிலின் உச்சியில்; நின்று- நின்று கொண்டு; வென்றி வானர வீரர் - வெற்றி மிகுகின்ற வானர வீரர்கள்; விசைத்தகல் - வேகத்துடன் வீசிய கற்கள்; குன்றின் வீழும் உருமின் குழுவின் - மலை மேல் விழுகின்ற இடியின் கூட்டங்கள் போல; சென்று- போய் ; தீயவர் ஆர் உயிர சிந்தின- கொடியவர்களாகிய அரக்கர்களின் அரிய உயிரைப் பறித்துச் சென்றன. |
(23) |
| 7040. | எதிர்த்த வானரம் மாக் கையொடு இற்றன; |
| மதில் புறங் கண்டு, மண்ணில் மறைந்தன;- |
| கதிர்க் கொடுங் கண் அரக்கர் கரங்களால் |
| விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே. |
| |
கதிர் கொடு கண் அரக்கர் கரங்களால் - (வெகுளியில்) ஒளியுடைய கண்களைக்கொண்ட அரக்கருடைய கைகளால்; விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலின்- அசைத்து வீசிய ஒளிர்கின்ற இலை வடிவான வேல்களால்; எதிர்த்த வானரம் - எதிர்த்துப் போரிட்ட வானரங்கள்; மாக்கையோடு இற்றன - பெரிய கரங்கள் அறுபட்டு மடிந்தனவாகி; மதில்புறம் கண்டு மண்ணில் மறைந்தன - மதிலுக்கு வெளிப்புறத்தில் மண்ணிலே (வீழ்ந்து) மறைந்தன. |
(24) |
| 7041. | கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப் |
| பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின, |
| இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை |
| முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின. |
| |
வானரம் - குரங்குகள்; வெம்சினம் முற்றின- கொடுங்கோபம் மிக்கனவாய்; கடித்த- (பற்களால் அரக்கரைக்) கடித்தன; கையில் குத்தின- கைகளால் குத்தின; கழுத்து அறப்பிடித்த - அரக்கர் கழுத்துகள் துண்டாம்படி இறுக்கின; வள் உதிரால் பிளவு ஆக்கின - கூரிய நகங்களால் இருபிளவாகப் பிளந்தன; இடித்த- முட்டிகளால் தாக்கின; எற்றின - கால்களால் உதைத்தன; |