பக்கம் எண் :

634யுத்த காண்டம் 

எண்ணில் அரக்கரை முடிக்க-எண்ணற்ற அரக்கர்களை
(இவ்வாறாக) அழித்தன.
 

வினைகளை   அடுக்கும்      திறத்தால்,    கம்பர் 
களக்காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார்.
   

(25)
 

7042.

எறிந்தும், எய்தும், எழு முளைத் தண்டு கொண்டு

அறைந்தும், வெவ் அயில் ஆகத்து அழுத்தியும், 

நிறைந்த வெங் கண் அரக்கர் நெருக்கலால், 

குறைந்த--வானர வீரர் குழுக்களே. 

 

வெம்கண்  நிறைந்த அரக்கர்- கொடுமை நிறைந்த
கண்களையுடைய அரக்கர்கள்;     எறிந்தும்   -   (பல
படைக்கருவிகளை) வீசியும்; எய்தும்- (அம்புகளை) ஏவியும்;
எழு- இரும்புத் தூண்  போன்ற; முளை தண்டு கொண்டு
அறைந்தும்
- மூங்கில்  கோல்களைக் கொண்டு அடித்தும்; 
வெம் அயில்  ஆகத்து    அழுத்தியும்
- கடுமையான 
வேல்களை     உடலில்    புதையுமாறு      அழுத்தியும்; 
நெருக்கலால்
-    நெருக்கியதனால்;     வானர   வீரர்
குழுக்கள் குறைந்த- குரங்கு வீரர்கள் கூட்டம் அளவில்
குறைந்து போயிற்று.
 

எழு-இரும்புத்தூண்:முளை-மூங்கில்."முளைவாய் எயிற்ற
முள்  உகிர்   ஞமலி"     (குறிஞ்சிப் : 131)  எனுமிடத்து,
முளை-மூங்கில்   எனும்  பொருளில் வந்தமை காணலாம். 
"நிறைந்த  வெங்கண்   அரக்கர்,   குறைந்த வானர வீரர்" 
என்பதில் அடிமுரணும் சொல் நயமும் தோன்றுதல் காண்க. 
 

(26)
 

7043.

செப்பின் செம் புனல் தோய்ந்த செம் பொன் மதில், 

துப்பின் செய்தது, போன்றது, சூழ் வரை; 

குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு 

உப்பின் சென்றது, உதிரத்து ஒழுக்கமே. 

 

செப்பில் செம்புனல் தோய்ந்த செம்பொன்மதில்-
செம்பை உருக்கிய ஒழுக்கினைப்போல, இரத்தம் தோய்ந்த
செம்பொன்னால் ஆன (இலங்கை) மதிலானது; சூழ் வரை
சுற்றி நின்ற  ஒரு மலை;  துப்பில் செய்தது போன்றது-
செம்பவழத்தால் ஆக்கியது  போலத் தோற்றம் அளித்தது;
உதிரத்து ஒழுக்கம்- இரத்தப்  பெருக்கம்;   குப்புற்று
பிணக்குன்று ஈர் - தலைகீழாக வீழ்ந்த