பிண மலைகளை இழுத்து; சுமந்து கொண்டு- தாங்கிக் கொண்டு ; உப்பில் சென்றது- உப்புக்கடலை நோக்கிப் பாய்ந்து சென்றது. |
மதில் இரத்தம் தோய்ந்து கிடந்தமையால், செம்பவழத்தால் ஆன மலை போன்று காட்சியளித்தது. பிணங்களைத் தோளில் சுமந்துகொண்டு செல்கையில், தலைகுப்புற வீழ்ந்து கிடப்பது இயல்பு. இரத்த ஆறு, பிணங்களைத் தலைகீழாக்கிக் கடலை நோக்கி இழுத்துச் சென்றது. உப்பு-ஆகு பெயராய் கடலைக் குறித்தது. |
(27) |
| 7044. | வந்து இரைத்த பறவை மயங்கின, |
| அந்தரத்தில் நெருங்கலின், அங்கு ஒரு |
| பந்தர் பெற்றது போன்றது--பற்றுதல் |
| இந்திரற்கும் அரிய இலங்கையே. |
| |
இந்திரற்கும் பற்றுதல் அரிய இலங்கை- (தேவர் தலைவனான) இந்திரனாலும் கைப்பற்றிக் கொள்ளுதற்கு அரியதான இலங்கை மாநகரானது; வந்து இரைத்த மயங்கின பறவை- அங்கு பிணம் தின்ன வந்து கூச்சலிட்ட பறவைகளின் பல்வகைக் கூட்டம்; அந்தரத்தின் நெருங்கலின் - ஆகாயத்தில் (இடைவெளியின்றி) நெருங்கியதால்; அங்கு ஒரு பந்தர் பெற்றது போன்றது- அவ்விடத்தின் மேலே பந்தல் (வேய்ந்து) இட்டாற்போன்று காட்சி தந்தது. |
போர்க்களக்காட்சியைத் தேவர்கள் காண இயலாதவாறு, பறவைகள் பந்தலிட்டு மறைத்தன என்பது ஒரு குறிப்பாம். "மயங்கின பறவை" என்பது, பல்வகையான பறவைக் கூட்டத்தைக் குறித்து நின்றது.தேவரும் வாய்திறக்க அஞ்சும் இலங்கையில் பறவைகளும் கூச்சலிடும் துணிவைப் பெற்றனவே! என வியந்தவாறு. |
(28) |
| 7045. | தங்கு வெங் கனல் ஒத்துத் தயங்கிய |
| பொங்கு வெங் குருதிப் புனற் செக்கர்முன், |
| கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து, |
| அங்கும் இங்கும் நின்று, ஆடினவாம்அரோ. |
| |
தங்கு வெங்கனல் ஒத்து- குவிந்து கிடக்கின்ற கொடுந்தணல் போன்று; தயங்கிய - ஒளிர்கின்ற; பொங்கு வெங்குருதிப் புனல் - பொங்குகின்ற கொடிய உதிர நீராகிய; செக்கர்முன் - சிவந்த அந்தி வானத்தின் முன்னால்;கங்குல் அன்ன கவந்தமும்- இரவு வந்தாற் போன்ற (அரக்கர்களின்) தலையற்ற உடல்களும்; கை எடுத்து- |