கைகளை உயர்த்தியவாறு; அங்கும் இங்கும் நின்று ஆடின- அங்கும் இங்குமாக நின்று ஆடல் நிகழ்த்தின. |
(29) |
| 7046. | கொன் நிறக் குருதிக் குடை புட்களின் |
| தொல் நிறச் சிறையில் துளி தூவலால், |
| பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம் |
| செந் நிறத்தனவாய், நிறம் தீர்ந்தவே. |
| |
கொன்நிறக் குருதி- அச்சந் தருகின்ற செந்நிறமுள்ள இரத்தத்திலே; குடைபுட்களின்- மூழ்குகின்ற பறவைகளின்; தொல் நிறச் சிறையில் துளிதூவலால் - பழைய இறகுகளில் படிந்த (குருதித்) துளிகள் சிந்துவதால்;பல்நிறத்த பதாகைப் பரப்பு எலாம் - பல நிறங்களைக் கொண்ட பெருங்கொடிகளின் கூட்டம் எல்லாம்; செந்நிறத்தனவாய் நிறம் தீர்ந்த - செந்நிறமாக மாறிப் பழைய நிறம் மாறிவிட்டன. |
(30) |
வானரங்கள் மதிலிலிருந்து இரங்குதலும் அரக்கர் நிரம்புதலும் |
| 7047. | பொழிந்த சோரிப் புதுப் புனல் பொங்கி மீ |
| வழிந்த மா மதில் கைவிட்டு, வானரம், |
| ஒழிந்த, மேருவின் உம்பர்விட்டு இம்பரின் |
| இழிந்த மாக் கடல் என்ன, இழிந்ததே. |
| |
வானரம்- குரங்குகள்; ஒழிந்த- வலிமை குறைந்தனவாய்; பொழிந்த சோரிப் புதுப்புனல்- சொரிந்த உதிரம் என்னும் புது வெள்ளம் பொங்கி; மீவழிந்த மாமதில் கைவிட்டு - மேலே வழியப் பெற்ற பெரிய மதிலினைக் கைவிட்டு விட்டு; மேருவின் உம்பர் விட்டு இம்பரின் இழிந்த-மேருகிரியின் மேலிடத்தை விட்டு அகன்று மற்றொரு பக்கத்தில் இறங்கிய; மாகடல் என்ன இழிந்த- பெரிய கடலே போன்று கீழே இறங்கின. |
(31) |
| 7048. | பதனமும், மதிலும், படை நாஞ்சிலும், |
| கதன வாயிலும், கட்டும் அட்டாலையும், |
| முதல யாவையும் புக்குற்று முற்றின- |
| விதன வெங் கண் இராக்கதர் வெள்ளமே. |