பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 639

தன் ஒலியை விடப் பேர் ஒலி இல்லை என்று, "ஆர்கலி"
எனும்  பட்டத்தைப்  பெற்றுத்  தருக்கியிருந்த   கடல், தன்
ஒலியிலும் பேரொலியுண்டு என்பதையுணர்ந்து  மனக்கலக்கம்
அடைந்தது   என்பதாம்.   முருடு -  பறைப்பொது   எனும் 
பிங்கலந்தை; மத்தளமுமாம். காளம்-எக்காளம். ஊது கொம்பு. 
ஆகுளி  -   சிறு    பறை.   "நுண்ணீர்  ஆகுளி  இரட்ட" 
(மதுரைக்காஞ்சி.    606)    தமிழகத்திலிருந்த   பல்வகைப் 
போர்க்கருவிகளின் பெயர்கள்.
 

(35)
 

இராவணனது படை வெளி வருதல்
  

7052.

ஆய காலை, அனைத்து உலகும் தரும் 

நாயகன் முகம் நாலும் நடந்தென, 

மேய சேனை விரி கடல், விண் குலாம் 

வாயிலூடு புறப்பட்டு வந்ததே. 

 

ஆயகாலை- அப்பொழுதில்; உலகு அனைத்தும்  தரும்
- உலகம்  யாவையும்  படைக்கும்; நாயகன் முகம்  நாலும்
நடந்தென
- நான்முகப் பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்தும்
புறப்பட்டது போல; மேய சேனை- (இலங்கையில்) பொருந்திய
(அரக்கர்)   சேனையாகிய;  விரிகடல் -  பரந்த   கடலானது;
விண்குலாம்வாயில் ஊடு- ஆகாயம் அளாவும் (இலங்கையின்)
நான்கு   வாயில்களின்    வழியே;     புறப்பட்டு வந்தது
வெளிப்பட்டு வந்தது.
 

(36)
 

7053.

நெடிய காவதம் எட்டும் நிரம்பிய, 

படிய வாயில் பருப்பதம் பாய்ந்தென, 

கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு 

ஒடிய ஊன்றின, மும் மத ஓங்கலே. 

 

நெடிய  காவதம் எட்டும் நிரம்பிய- நீண்ட எட்டுக் 
காதப்  பரப்பும்  நிறையுமாறு; மும்மத  ஓங்கல்- மூன்று 
மதங்களையுடைய    யானைகள்;     படிய    வாயில்
படிகளையுடைய   கோட்டை  வாயில்களில்;   பருப்பதம் 
பாய்ந்தென
  -   மலைகள்   பாய்ந்து  சென்றாற்போல; 
கொடியோடும்
  - (தம்மீதுள்ள)  கொடிகளோடும்;கொடி 
சுற்றத்  கொடுத்த  தண்டு
- பிற யானைகளின் மீதுள்ள 
கொடிகளோடும்  (அக்கொடிகள்)  சுற்றிக்கொள்ள, (அவை) 
கட்டியுள்ள  கம்புகள்; ஓடிய  ஊன்றின  -  ஓடியுமாறு 
நெருங்கி (அவற்றை) ஊன்றிக்கொண்டு வெளிவந்தன.
 

(37)