| 7054. | சூழி யானை மதம் படு தொய்யலின், |
| ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ, |
| பாழி ஆள் வயிரப் படி பல் முறை |
| பூழி ஆக்கின, பொன் நெடுந் தேர்களே. |
| |
பொன் நெடுந்தேர்கள்- பொன்னால் ஆகிய நீண்ட தேர்கள்;சூழி யானை - முகபடாம் அணிந்த யானைகளினுடைய; மதம் படு தொய்யலின் - மதநீர் பெருகுவதனால் ஆகிய சேற்றில்; ஊழி நாள் நெடுங்கால் என- ஊழிக்காலத்திலே வீசும் பெருங்காற்றுப் போல; ஓடும் - விரைந்து ஓடுவனவாய்; பாழி ஆள் வயிரப்படி- வன்மை பொருந்திய வயிரம் போன்ற பூமியை; பன்முறை பூழி ஆக்கின- பலவாறாகத் துகள்படுத்தின. |
சேறுமாய்த் தேர்கள் ஓடத்துகளுமாய், ஒன்றோடொன்று மாறுமாறாகி, வாளாகிடக்கிலா மறுகிற் சென்றார்" (கம்ப. 485) என்றார். மிதிலைக்காட்சியிலும். |
(38) |
| 7055. | பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் |
| இடித்த மா மதில் ஆடை இலங்கையாள், |
| மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம் |
| குடித்துக் கால்வன போன்ற, குதிரையே. |
| |
பிடித்த வானரம் - இலங்கைக் கோட்டையைக் கைப்பற்றிய வானரங்கள்; பேர் எழில் தோள்களால் - (அவற்றின்) பெருத்த அழகிய தோள்களால்; இடித்த மாமதில் - தகர்க்கப்பட்ட உயர்ந்த மதிலாகிய; ஆடை இலங்கையால் - ஆடையையுடுத்த இலங்கையென்னும் மங்கை; குடித்து மடுத்த மாக்கடல் - (இடிபட்ட மதில்களின் வழியே உட்புகுந்ததால்) பருகி உட்கொண்ட கடல் நீரை; வாவும் திரையெலாம்- தாவிச் செல்லும் அலைகளாக; கால்வன போன்ற குதிரை- கக்குவது போன்றிருந்தன குதிரைகள். |
(39) |
| 7056. | கேள் இல் ஞாலம், கிளத்திய தொல் முறை |
| நாளும் நாளும் நடந்தன நள் இரா, |
| நீளம் எய்தி, ஒரு சிறை நின்றன, |
| மீளும் மாலையும் போன்றனர்--வீரரே. |