பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 641

கேள் இல் ஞாலம் - உவமை கூற இயலாத உலகத்தில்;
தொல்முறை  கிளத்திய - பழங்காலந்தொட்டு    பகர்கின்ற;
நாளும் நாளும் - நாள்தோறும்;நடந்தன    நள்   இரா-
சென்றனவாகிய அடர்ந்த இரவுகள்; நீளம் எய்தி ஒரு சிறை
நின்றன-  (இலங்கையின்  பேரொளிக்  கூட்டத்திற்கு அஞ்சி)
வரிசையாக  ஒரு  பக்கத்தில்  (சிறைப்பட்டு)   இருந்தவைகள்;
மீளும்  மாலையும் போன்றனர் வீரர்- (சிறை வீடு பெற்று)
மீண்டு  வெளியே  புறப்பட்டு  வருவது  போன்று   அரக்க
வீரர்களாகிய காலாட்படையினர் வெளி வந்தனர்.
 

கேழ்-ஒப்பு. எதுகை நோக்கி, "கேள்" என வந்தது.
 

(40)
 

7057.

பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட, 

முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற, 

பித்தி பிற்பட, வன் திசை பேர்வுற, 

தொத்தி, மீண்டிலவால்--நெடுந் தூளியே. 

 

நெடுந்தூளி  -  (இவ்வாறு)   நால்வகைப்   படைகளாலும்
எழுப்பப்பட்ட)   பெரும்   புழுதியானது;  பத்தி - வரிசையாக;
வன்தலைப்  பாம்பின்  -  வலிய  தலைகளைக்    கொண்ட
ஆதிசேடனுடைய ;  பரம்கெட -  பாரம்  கெடுமாறு;  முத்தி 
நாட்டின் முகட்டினை
- வான நாட்டின் முகட்டினை; முற்றுற
முழுவதும்    வளைத்துக்     கொள்ளுமாறும்;  பித்திபின்பட
அண்டச்சுவர்  பின்  ஆகுமாறும்; வன்திசை பேர்வுற- வலிய
திசைகள்  பெயருமாறும்;  தொத்தி மீண்டில- ஒட்டிக்கொண்டு 
மீளாதன ஆயின.
 

(41)
 

வானரச் சேனை நிலைகுலைய, சுக்கிரீவன் சினந்து பொருதல்
  

7058.

நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால், 

குரக்குஇனப் பெருந் தானை குலைந்து போய், 

அருக்கன் மா மகன், ஆர் அமர் ஆசையால் 

செருக்கி நின்றவன், நின்றுழிச் சென்றவால். 

 

நெருக்கி  வந்து- (தம்மை) நெருக்கிக் கொண்டு  வந்து;
நிருதர்  நெருங்கலால் -  அரக்கர்கள்    நெருங்குவதனால்;
குரக்கினப்  பெருந்தானை -  வானரக்  கூட்டத்தின் பெரும்
படைகள்;  குலைந்து  போய்- நிலை  குலைந்து போய்; ஆர் 
அமர்  ஆசையால்
  -  போர்   செய்யவேண்டும்   என்னும் 
பேராசையுடன்;   செருக்கி   நின்றவன் -   பெருமிதத்தோடு 
நிற்கின்றவனான; அருக்கன் மாமகன் - சூரியன்