பக்கம் எண் :

642யுத்த காண்டம் 

புதல்வன்     சுக்கிரீவன்;   நின்றுழிச் சென்ற -  நிற்கும்
இடத்தை நோக்கிச் சென்றன.
 

(42)
 

7059.

சாய்ந்த தானைத் தளர்வும், சலத்து எதிர் 

பாய்ந்த தானைப் பெருமையும், பார்த்து, உறக் 

காய்ந்த நெஞ்சன், கனல் சொரி கண்ணினன், 

ஏய்ந்தது அங்கு ஓர் மராமரம் ஏந்தினான். 

 

சாய்ந்த தானைத் தளர்வும் - வலிமை குறைந்த வானரப்
படையினுடைய  தளர்ச்சியையும்;   சலத்து    எதிர்பாய்ந்த 
தானைப்  பெருமையும்
-வெகுளியோடு  எதிரே தாவி வருகிற 
அரக்கர் படையின் சிறப்பையும்; பார்த்து-கண்டு;உறக்காய்ந்த-
மிகவும் கொதிப்புற்ற; நெஞ்சன்-நெஞ்சையுடையவனும்; கனல்
சொரி கண்ணினன்-நெருப்புச் சிந்துகின்ற கண்களையுடையவனு
மாகி; அங்கு  ஏய்ந்தது-  அவ்விடத்தில்  கிடைத்த; ஓர்
மராமரம்    ஏந்தினான் -    ஒரு   மராமரத்தை  தூக்கினான்
(சுக்கீரிவன்).
 

(43)
 

7060.

வாரணத்து எதிர், வாசியின் நேர், வயத்

தேர் முகத்தினில், சேவகர்மேல், செறுத்து, 

ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று, உயர் 

தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். 

 

வாரணத்து -  யானை மேலும்; வாசியின் - குதிரை மீதும்;
வயத் தேர்  முகத்தினில் - வலிமை மிக்க  தேரின்  முன்பும்;
சேவகர்மேல் - அரக்க வீரர் மீதும்;   செறுத்து - வெகுண்டு;
ஓர்  ஒருத்தர்க்கு ஒருவரின்-ஒவ்வொருத்தனுக்கு முன்னாலும்;
உற்று - ஒவ்வொரு  சுக்கிரீவன்    நிற்பதைப்போல;    உயர்
தோரணத்து- உயர்ந்த தோரண வாயிலிலே; எதிர்நேர் ஒருவன்
என-  எதிர்  நின்று  (அரக்கருடன்)  போரிட்ட ஒப்பற்றவனான
அனுமனைப்   போல;     தோன்றினான் - தோற்றமளித்தான்
சுக்கிரீவன்.
 

(44)
 

7061.

களிறும், மாவும், நிருதரும், கால் அற, 

ஒளிறு மா மணித் தேரும் உருட்டி, வெங் 

குளிறு சோரி ஒழுக, கொதித்து, இடை 

வெளிறு இலா மரமே கொண்டு, வீசினான்.