பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 643

களிறும்  மாவும்  நிருதரும் கால் அற- யானைகளும்
குதிரைகளும் அரக்க வீரர்களும்  கால் ஒடிந்து   வீழுமாறும்; 
ஒளிறும் மாமணித் தேரும்  உருட்டி
- ஒளிர்கின்ற  பெரிய 
மாணிக்கத்  தேர்களைக்  கவிழுமாறும்; வெம்குளிறு சோரி 
ஒழுக
-  வெப்பமுடையதாய்  ஒலித்துக்  கொண்டு  உதிரம் 
ஆறாய்ப்  பெருக்கெடுக்குமாறும்; கொதித்து -  மனத்தில் 
வெம்மையோடு;  இடை-  நடுவில்;   வெளிறு    இலா
வெண்மையில்லாத (முழுவயிரம் பாய்ந்த); மரமே கொண்டு 
வீசினான்
- அந்த மராமரத்தைக் கொண்டே எறிந்தான்.
 

பிற போர் ஆயுதங்கள் செய்ய இயலாத அழிவை எளிய
மரத்தையே  கொண்டு  சுக்கிரீவன்  செய்து   முடித்தலால், 
"எளிய மரமே கொண்டு வீசினான்" என்றார். ஏகாரம்-பிரிநிலை.
 

(45)
 

7062.

அன்ன காலை, அரிக் குல வீரரும் 

மன்னன் முன் புக, வன்கண் அரக்கரும் 

முன் உழந்த முழங்கு பெருஞ் செருத் 

தன்னில் வந்து, தலைமயக்குற்றனர். 

 

அன்ன   காலை- அப்பொழுது; அரிக்குல வீரரும்
வானர  இனத்தைச் சார்ந்த வீரர்களும்; மன்னன் முன்புக 
-அரசனான சுக்கிரீவன் முன்பு செல்ல;வன்கண் அரக்கரும்
- கொடிய  இராக்கதரும்; முன் உழந்த - முன்பு போரிட்டு 
வருந்திய;  முழங்கு  பெருஞ்செருதன்னில்-  ஒலிக்கின்ற 
பெரிய  போரில்;  வந்து  தலைமயக்குற்றனர் -  வந்து 
கைகலந்தனர்.
 

(46)
 

7063.

கல் துரந்த களம் பட, வஞ்சகர் 

இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்; 

வில் துரந்தன வெங் கணையால் உடல் 

அற்று உலந்த குரங்கும் அனந்தமே. 

 

களம் துரந்த கல்பட- போர்க்களத்தில் எறிந்த கற்கள்
வீழ்ந்ததனால்; வஞ்சகர்  இற்று  உலந்து- வஞ்சகராகிய
அரக்கர்களில்  உயிரற்று  ஆயுள்  அழிந்து;   முடந்தவர்
எண்ணிலர் -  இறந்து  போனவர்கள்   கணக்கற்றவர்கள்;
வில்துரந்தன-   அரக்கரின்     விற்கள்    செலுத்திய; 
வெம்கணையால் -  கொடிய அம்புகளால்; உடல் அற்று
உலந்த  குரங்கும்
-  உடல் இழந்து இறந்த குரங்குகளும்; 
அனந்தம்
- எல்லையில்லாதனவாம்.