கல்லைக் கொண்டு போரிட்ட வானரங்களும், வில்லைக்கொண்டு போரிட்ட அரக்கர்களும் எண்ணற்றோர் களத்தில் இறந்து பட்டனர் என்பதாம். |
(47) |
| 7064. | கற்கள் தந்து, நிமிர்ந்து, கடுஞ் செரு |
| மற்கடங்கள் வலிந்து மலைந்திட, |
| தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர் |
| தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால். |
| |
நிமிர்ந்து கடும் செரு- உயர்ந்து கடுமையாக நிகழ்ந்த யுத்தத்தில்; மற்கடங்கள் - குரங்குகள்; வலிந்து- வலிமையோடு; கற்கள் தந்து மலைந்திட- கற்களை வீசிப் போரிட; தற்கு அடங்கி - (தம்) கர்வம் அழிந்து; உலந்தவர் தம் உயிர்- இறந்தவர்களான அரக்கர்களின் உயிர்கள்; தெற்கு அடங்க-தென்திசை முழுவதும்; நிறைந்து செறிந்த- நிறைந்து நெருங்கின. |
மர்க்கடம்-குரங்கு. தற்கு-தருக்கு; செருக்கு. எதுகை நோக்கி மற்கடம் எனவும், தற்கு எனவும் வந்தன. செய்யுளாதலின், தெற்கு-இயமனின் திசை. ஆகுபெயராய் அவன் உலகைக் குறித்தது. |
(48) |
| 7065. | பாடுகின்றன, பேய்க் கணம்; பல் விதத்து |
| ஆடுகின்ற, அறு குறை; ஆழ கடற்கு |
| ஓடுகின்ற, உதிரம்; புகுந்து, உடல் |
| நாடுகின்றனர், கற்புடை நங்கைமார். |
| |
பேய்க்கணம் பாடுகின்றன- பேயின் கூட்டங்கள் (போர்க்களத்தில்) பாடத் தொடங்கின;அறுகுறை- தலைஅற்ற கவந்தங்கள்;பல்விதத்து ஆடுகின்ற- பலவகையாக ஆடத் தொடங்கின;உதிரம் - இரத்தமானது;ஆழ்கடற்கு- ஆழமிக்க கடலைநோக்கி; ஓடுகின்ற- ஓடத்தொடங்கின; கற்புடை நங்கைமார் - கற்புடைய மகளிர்; புகுந்து- போர்களத்துக்குள் புகுந்து; உடல் நாடுகின்றனர்- (இறந்துபட்ட) தத்தம் கணவன்மார்களின் உடலைத் தேடத் தொடங்கினர். |
(49) |
| 7066. | யானை பட்ட அழி புனல் யாறு எலாம் |
| பானல் பட்ட; பல கணை மாரியின் |
| சோனை பட்டது; சொல்ல அரும் வானரச் |
| சேனை பட்டது; பட்டது, செம் புண்ணீர். |