பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 647

வச்சிரமுட்டியைச் சுக்கிரீவன் அழித்தல்
  

7070.

நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி 

வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள் 

தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன் 

யாக்கையும் சிதைத்திட்டு, எழுந்து ஏகினான். 

 

நோக்கி- (அந்நிலை)  கண்டு  (சுக்கிரீவன்); வஞ்சன்
நொறில் வயமாப்பரி
- வஞ்சகன்  ஆகிய  வச்சிரமுட்டியின்
விரைந்து செல்லும் வலிய குதிரைகள்; வீக்கு தேரின் மீது-
பூட்டிய  தேரின்  மீது; எழப்  பாய்ந்து- எழுந்து பாய்ந்து;
தோள் தூக்கு தூணியும்  வில்லும் -  தோளில்  தொங்க
விட்டிருந்த  அம்பறாத்  தூணியையும்   வில்லினையும்
தொலைத்து - அறுத்து; அவன் யாக்கையும்-  அவனுடைய 
உடலையும்;      சிதைத்திட்டு   எழுந்து   ஏகினான் -
அழித்துவிட்டு, (அங்கிருந்து) கிளம்பிச்சென்றான்.
  

நொறில்-விரைவு.  "நொறில்  பரித்தேர் பட நூறி" (3034)
என்பார்  முன்னும்.  சிதைத்திட்டு-'இட்டு' துணைவினை. தம்
அழிவிற்குக் காரண கருத்தனாகிய வச்சிரமுட்டியை மாய்த்து,
படைத்தலைவன் தான் என நிரூபித்தான் சுக்கிரீவன். "தானை
படைத்தகையால் பாடுபெறும்" (குறள். 768) எனும் வள்ளுவர்
வாய்மொழி உண்மையாதல் காண்க.
  

(54)
 

7071.

மலை குலைந்தென, வச்சிரமுட்டி தன் 

நிலை குலைந்து விழுதலின், நின்றுளார் 

குலைகுலைந்து கொடி நகர் நோக்கினார்; 

அலை கிளர்ந்தென, வானரம் ஆர்த்தவே. 

 

மலை  குலைந்தென - மலை நிலை குலைந்தாற்போல;
வச்சிரமுட்டி -   வச்சிரமுட்டியானவன்;   தன்    நிலை
குலைந்து விழுதலின்
-  தன்  நிலைதடுமாறி விழுந்ததனால்;
நின்றுளார்
- (அவனைச் சார்ந்து) நின்றிருந்த அரக்கர்கள்; 
குலை குலைந்து
- நடுநடுங்கி; கொடிநகர்  நோக்கினர்
கொடிகள் உயர்ந்த இலங்கை மாநகரை நோக்கித் திரும்பினர்; 
அலை கிளர்ந்தென 
  வானரம்  ஆர்த்த -   அலைகள் 
பொங்கி எழுந்தாற்போல வானரங்கள் பேரொலி செய்தன.
  

இப்பாடலின்  தொடைப்பொலிவும், நடைநயமும் இன்பந்
தருபவை.  "மலை  குலைந்தென"  என   வச்சிரமுட்டியைக்
குறிப்பதனால்,