பக்கம் எண் :

648யுத்த காண்டம் 

"அவன்    அளக்கலாகா     அளவும்     பெருமையும்,
துளக்கலாகா  நிலையும்  தோற்றமும்"    (நன். பொதுப்) 
கற்பார் கண் முன் நிறுத்துகின்றார் கவிஞர்.
 

(55)
 

கீழை வாசலில் நிகழ்ந்த போர்
  

7072.

வீழி வெங் கண் இராக்கதர் வெம் படை, 

ஊழி ஆழி கிளர்ந்தென ஓங்கின, 

கீழை வாயிலில் கிட்டலும், முட்டினர், 

சூழும் வானர வீரர் துவன்றியே. 

 

வீழி  வெங்கண் இராக்கதர் வெம்படை-   வீழிக்கனி
போன்று  சிவந்த     கொடுங்கண்களையுடைய    அரக்கரின்
கொடும்படை; ஊழி ஆழி கிளர்ந்தென -   ஊழிக்காலத்தே 
கடல் பொங்கியெழுந்தது  போல; ஓங்கின -  மேல்  எழுந்து 
வந்தன; கீழை வாயிலில் கிட்டலும்- வை கிழக்கு  வாசலை 
அடைதலும்; சூழும்  வானர  வீரர்  துவன்றி  முட்டினர்-
சுற்றிலும் உள்ள வானரப்படை வீரர்கள் நெருக்கித் தாக்கினர்.
  

வீழி-ஒரு கனி; செந்நிறமுடையது. வெகுளியால் எப்போதும்
சிவந்திருக்கும். அரக்கர்   கண்களுக்கு உவமை. கீழை வாசல்
வானரப்படைத் தலைவன் நீலன் ஆவான்.
   

(56)
 

7073.

சூலம், வாள், அயில், தோமரம், சக்கரம், 

வாலம், வாளி, மழையின் வழங்கியே, 

ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும், 

காலும் வாலும் துமிந்த, கவிக் குலம். 

 

ஆலம்  அன்ன  அரக்கர்-  கொடிய  நஞ்சு போன்ற
அரக்கர்கள்;  சூலம், வாள், அயில்,  தோமரம், சக்கரம், 
வாலம், வாளி
- சூலம், வாள், மழு, தோமரம், சக்கரம், பிண்டி
பாலம்,  அம்பு  (முதலிய) ஆயுதங்களை; மழையின் வழங்கி
மழை  போன்று  பொழிந்து; அடர்த்தலும்- எதிர்த்தபோது;
கவிக்குலம் - வானரக்கூட்டங்கள்; காலும் வாலும் துமிந்த-
கால்களும் வால்களும் துண்டிக்கப்பட்டன ஆயின.
 

சூலம் - முத்தலைவேல்.        தோமரம்    -    தண்டு; 
இரும்புலக்கையுமாம்.   எறியீட்டி    என்பாரும் உளர். வாலம்-
பிண்டிபாலம். ஆலம்-நஞ்சு. அரக்கர் ஆலத்துக்கு ஒப்பு. "ஆலம்
அன்னவர்க்கு" (கம்ப. 5351) 
  

(57)