கும்பானு என்னும் அரக்க சேனைத்தலைவன் அங்கு வந்து; நெடும்சரம் துரக்க- மிகத் தூரம் செல்லும் அம்புகளை ஏவ; வானரச் சேனை துணிந்த- குரங்குப் படை துண்டுபட்டன. |
இது முதல் ஆறு பாடல்கள் கும்பானுவும் இடும்பனும் போரிட்டு மாண்டது கூறும். நீலன் இட்ட மராமரத்துக்கு அஞ்சி, அரக்கர் சேனை ஓடுவதைத் தடுத்து,கும்பானு வானரச்சேனைகள் துண்டுபடுமாறு கணைகள் சொரிந்தான் என்பதாம். |
(62) |
| 7079. | கண்டு நின்ற கரடியின் காவலன், |
| எண் திசாமுகம் எண்ணும் இடும்பன், ஓர் |
| சண்டமாருதம் என்ன, தட வரை |
| கொண்டு சீறி, அவன் எதிர் குப்புறா, |
| |
கண்டு நின்ற கரடியின் காவலன் - (இவ்வாறு வானரப்படை துண்டுபடுவதை) நோக்கி நின்ற கரடிகட்குத் தலைவனாகிய; எண்திசாமுகம் எண்ணும் - எட்டுத்திக்கில் இருப்போரும் மதிக்கின்ற; இடும்பன் - (வலியோனாகிய) இடும்பன்; தடவரை கொண்டு - ஒரு பெரிய மலையைக் கையில் கொண்டு; ஓர் சண்ட மாருதம் என்ன- பெரும் புயல் காற்றுப் போல; அவன் எதிர் குப்புறா- அக்கும்பானு என்னும் அரக்கர் படைத்தலைவன் முன் சென்று கவிழ்ந்து குதித்து; சீறி-கோபித்து; (எறிதலும் என்று அடுத்த பாடலொடு தொடரும்). |
குளகம். குப்புறல்-குதித்தல். கரடியின் காவலன் இடும்பன். எண்திசா முகம் எண்ணும் இடும்பன் எனக்கூட்டுக. திசாமுகம் - ஆகுபெயராய்த் திசாமுகத்தில் உள்ளோரைக் குறித்தது. இடும்பன்-சாம்பவானின் வாயிற்பிரதானி என்பர். |
(63) |
| 7080. | தொடுத்த வாளிகள் வீழும் முன், சூழ்ந்து எதிர் |
| எடுத்த குன்றை இடும்பன் எறிதலும், |
| ஒடித்த வில்லும் இரதமும், ஒல்லெனப் |
| படுத்த, வாசியும் பதாகையும் பாழ்பட.* |
| |
தொடுத்த வாளிகள் - (கும்பானு என்னும் அரக்கர் படைத்தலைவன்) விடுத்த அம்புகள்; சூழ்ந்து- சுற்றிலும்; விழும்முன்-வீழ்வதற்கு முன்னால்; எதிர் எடுத்த குன்றை- நேராக உயர்த்திப் பிடித்த மலையை; இடும்பன் எறிதலும்- (கரடிகள் தலைவனாகிய) இடும்பன் வீசி எறிந்தவுடன்; (அதனால்) ஒடித்த |