பக்கம் எண் :

652யுத்த காண்டம் 

வில்லும்  இரதமும்  -  ஒடிக்கப்பெற்ற வில்லும்  தேரும்;
வாசியும் பதாகையும்  பாழ்படக் - குதிரையும்  கொடியும்
அழிந்து படுமாறு; ஒல் எனப் படுத்த- விரைவாக வீழ்த்தப்
பெற்றன.
  

(64)
  

7081.

தேர் அழிந்து, சிலையும் அழிந்து உக, 

கார் இழிந்த உரும் எனக் காய்ந்து, எதிர் 

பார் கிழிந்து உகப் பாய்ந்தனன்--வானவர் 

போர் கிழிந்து புறம் தர, போர் செய்தான். 

 

வானவர்  போர் கிழிந்து புறம்தர- தேவர்கள் போரில்
தோற்றுப்  புறமுதுகிடும்படியாக;  போர்  செய்தான் - முன்பு
போர்  செய்தவனாகிய  கும்பானு  என்னும்  அசுரன்;  தேர் 
அழிந்து
- தேர் சிதைந்து; சிலையும் அழிந்து உக- வில்லும்
சிதைந்து  முறிப்பட்டதனால்;  கார்  இழிந்த  உரும்  எனக்
காய்ந்து
-  மேகத்திலிருந்து  விழுந்த  இடி போலக் கோபித்து;
பார்  கிழிந்து  உக-  நிலமே  பிளந்து  சிதையும்படி; எதிர்
பாய்ந்தனன்
- இடும்பனுக்கு எதிராகப் பாய்ந்தான்.
  

சிலை - வில்.    கார் - மேகம்.  (தேரிலிருந்து)  கும்பானு,
குதித்தமைக்கு மேகத்திலிருந்து வீழ்ந்த இடி உவமை.
 

(65)
 

7082.

தத்தி, மார்பின் வயிரத் தடக் கையால்

குத்தி நின்ற கும்பானுவை, தான் எதிர் 

மொத்தி நின்று, முடித் தலை கீழ் உற, 

பத்தி வன் தடந் தோள் உறப் பற்றுவான். 

 

தத்தி-   (அவ்வாறு)    பாய்ந்து;   மார்பின்    வயிரத்
தடக்கையால்
- தன் மார்பிலே வயிரம் போன்ற  வலிய பெரிய
கரங்களால்;   குத்தி   நின்ற   கும்பானுவை- தாக்கி  நின்ற
கும்பானுவை;   தான்  எதிர்  மொத்தி   நின்று-   தானும்
எதிர்த்து  அவனைக்  குத்தி  நின்று; முடித்தலை கீழ் உற-
அவன் மகுடமணிந்த தலை கீழாகுமாறு; பத்திவன் - ஒழுங்குற
அமைந்துள்ள அவன் வலிய; தடந்தோள் உறப் பற்றுவான் -
பெரிய தோள்களை அழுத்திப் பற்றுவான் ஆனான்.
  

கும்பானுவைத் தலைகீழாகக் கவிழ்த்து, தோள்களை அழுத்திப்
பிடித்து, இடும்பன் கொல்ல முயலும் முயற்சி கூறியவாறு.
 

(66)