மேகத்துக்குச்சமம் ஆனான். முதல் 11 பாக்கள் பிரகத்தன் முடிவுகூறும். |
(68) |
| 7085. | வாங்கி வார் சிலை, வானர மாப் படை |
| ஏங்க நாண் எறிந்திட்டு, இடையீடு இன்றி, |
| தூங்கு மாரி என, சுடர் வாளிகள், |
| வீங்கு தோளினன், விட்டனனாம்அரோ. |
| |
வீங்கு தோளினன் - புயங்கள் பூரிக்கப் பெற்ற பிரகத்தன்; வார்சிலை வாங்கி- நீண்ட வில்லை வளைத்து; வானர மாப்படை ஏங்க-குரங்கினப் பெரும்படை வருந்துமாறு; நாண் எறிந்திட்டு- நாண் ஒலியெழுப்பி; தூங்குமாரி என- பொழிகின்ற மழை போல; சுடர்வாளிகள்- ஒளிமிக்க அம்புகளை; இடையீன்றி விட்டனன் ஆம் - இடைவிடாது எய்தனன் ஆம். |
போர் எனில் பூரிக்கும் தோளினன், ஆதலால் "வீங்கு தோளினன்" என்றார், பிரகத்தன் நாண் ஒலி கேட்டு, வானரப் படை வருந்திற்று என அவன் ஆற்றல் மிகுதி கூறியவாறு. தூங்குதல் - சொரிதல் "வீழ்பனி தூங்கத் துவண்டு" (திருக்கோவை. 320) என்பது காண்க. ஆம் - உரையசை. அரோ-அசை. |
(69) |
| 7086. | நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் |
| வேறு வேறு படுதலின், வெம்பியே, |
| ஈறு இல் வானர மாப் படை எங்கணும் |
| பாற, நீலன் வெகுண்டு, எதிர் பார்ப்புறா, |
| |
நொய்தினின் - விரைவோடு; கணை நூறும் ஆயிரமும்- அம்புகள் நூறும் ஆயிரமுமாக; வேறு வேறுபடுதலின்- வெவ்வேறு வகையில் (தம்மீது) படுதலால்; ஈறு இல் வானர மாப்படை- எல்லையில்லாக் குரங்கினத்துப் பெரும்படைகள்; வெம்பி - மனம் கொதித்து; எங்கணும் பாற- எல்லாப் பக்கங்களிலும் சிதறி விட; நீலன் எதிர் பார்ப்புறா- நீலன் என்னும் வானர வீரன் எதிரே பார்த்து வெகுண்டு கோபித்து; |
குளகம் - அடுத்த பாடலில் வினை கொள்ளும். பார்ப்புறா - பார்த்து. நொய்தினின் - விரைவில். பாற - வீற்று வீற்றாகச் சிதற. |
(70) |