| 7087. | குன்றம் நின்றது எடுத்து, எதிர் கூற்று எனச் |
| சென்று எறிந்து, அவன் சேனை சிதைத்தலும், |
| வென்றி வில்லின் விடு கணை மாரியால், |
| ஒன்று நூறு உதிர்வுற்றது, அக் குன்றமே. |
| |
நின்றது குன்றம் எடுத்து- அருகிருந்த ஒரு மலையை எடுத்து; எதிர் கூற்று எனச் சென்று - எதிரே வருகிற கூற்றுவனைப் போலப் போய்; எறிந்து அவன் சேனை சிதைத்தலும்-தாக்கி அந்தப் பிரகத்தனுடைய படையை அழித்த போது; வென்றி வில்லின்-அவ்வரக்கன் தனது வெற்றி ஏந்திய வில்லிலிருந்து; விடுகணை மாரியால்- விடுபட்ட அம்புகள் என்னும் மழையினால்; அக்குன்றம் - அந்த மலையும்; ஒன்று நூறு உதிர்வு உற்றது- ஒன்று நூறாக தூளாகப் (பொடிந்து) விழுந்தது. |
குன்றம் நின்ற என்பதனை, நின்ற குன்றம் என மாற்றிப் பொருள் கொள்க. தன் சேனையை அம்பினால் சிதைத்த பிரகத்தன் சேனையை மலையால் நீலன் சிதைத்தான். விடுகணை மாரி-உருவகம். |
(71) |
| 7088. | மீட்டும், அங்கு ஓர் மராமரம் வேரொடும் |
| ஈட்டி, வானத்து இடி என எற்றலும், |
| கோட்டும் வில்லும், கொடியும், வயப் பரி |
| பூட்டும் தேரும், பொடித் துகள் ஆயவே. |
| |
மீட்டும் - (நீலன்) மீண்டும்; அங்கு ஓர் மராமரம்- அங்கிருந்த மராமரம் ஒன்றை; வேரோடும் ஈட்டி- வேரோடும் பிடுங்கி; வானத்து இடியென எற்றலும்- விண்ணில் எழும் இடி போன்று (முழங்கி) (அம்மரத்தை) வீசியபோது; கோட்டும் வில்லும்- வளைத்த வில்லும்; கொடியும்- தேரின் கொடியும்; வயப்பரி பூட்டும் தேரும் - வலிய குதிரைகள் பூட்டிய தேரும்; துகள் பொடி ஆய- சிறு துகளாய் விட்டன. |
(72) |
| 7089. | தேர் இழந்து, சிலையும் இழந்திட, |
| கார் இழிந்த உரும் எனக் காந்துவான், |
| பார் இழிந்து, பரு வலித் தண்டொடும், |
| ஊர் இழந்த கதிர் என, ஓடினான். |
| |
தேர் இழந்து சிலையும் இழந்திட- (பிரகத்தன்) தன் தேரினை இழந்து, வில்லையும் இழந்ததனால்; கார் அழிந்த உரும்என - |