உள்ளம் நடுங்க- வானுலகத் தேவர்கள் தத்தம் மனம் நடுங்குமாறு; எரியின் திரு மைந்தன் மேல்- நெருப்பின் மைந்தனான அந்த நீலன் மேல்; செம்புனல் பொழிய- உதிரம் சொரியுமாறு; கதை சேர்த்தினான் - தண்டால் தாக்கினான். |
அம்பரம் - ஆகாயம். இம்பர் - இங்குத் தரை எனும் பொருளில் வந்தது. உம்பர் - தேவர். அறங்காத்தற்காக தம் பொருட்டுப் போரிடுகின்ற நீலனுக்கு ஏதாயினும் நேர்ந்து விடுமோ என்று தேவர் நடுங்கினர். |
(75) |
| 7092. | அடித்தலோடும், அதற்கு இளையாதவன், |
| எடுத்த தண்டைப் பறித்து எறியா, 'இகல் |
| முடித்தும்' என்று, ஒரு கைக்கொடு மோதினான், |
| குடித்து உமிழ்ந்தெனக் கக்கக் குருதியே. |
| |
அடித்தலோடும்- (பிரகத்தன் தண்டால்) அடித்துத் தாக்கிய போது; அதற்கு இளையாதவன் - (நீலன்) அதற்குச் (சிறிதும்) சளைக்காதவனாய்; எடுத்த தண்டம் - (அவன் கையில்) எடுத்த தண்டாயுதத்தை; பறித்து எறியா- பிடுங்கி எறிந்து; இகல்முடித்தும் என்று- இப்பகையினை (இப்போது) முடிப்பேன் என்று; குடித்து உமிழ்ந்தென-(முன்பு) பருகியுள்ள உதிரத்தைக் கொப்புளிப்பதைப் போல; குருதி கக்க- இரத்தத்தைக் கக்கும்படி; ஒரு கைகொடு தாக்கினான் - ஒரு கையைக் கொண்டு தாக்கினான் (நீலன்). |
குடித்து உமிழ்ந்தெனக் குருதி கக்கினான் என்றது தற்குறிப்பேற்றம். |
(76) |
| 7093. | குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன், |
| நிருதன், நீலன் நெடு வரை மார்பினில் |
| கருதலாத முன் குத்தலும், கைத்து, அவர் |
| பொருத பூசல் புகல ஒண்ணாததே. |
| |
குருதி வாய்நின்று ஒழுகவும் - இரத்தமானது வாயிலிருந்து ஒழுகவும்; கூசலன்- அஞ்சாதவனாய்; நிருதன் - அந்தப் பிரகத்தன்; நீலன்நெடு வரை மார்பினில் - நீலனுடைய நீண்ட மலை போன்ற மார்பில்; கருதலாத முன் குத்தலும் - நீலன் நினைப்பதற்கு முன் குத்தியவுடன்; அவர் - அவ்விருவரும்; கைத்துப் பொருதபூசல் - ஒருவருக்கொருவர வெறுப்புடன் புரிந்த போர்; புகல ஒண்ணாதது- (சொல்லால்) சொல்லும் தரம் உடையதன்று. |