பக்கம் எண் :

658யுத்த காண்டம் 

நினைப்பதற்கு  முன்  பிரகத்தன் அவனைக் குத்தினான்
என்பார்.    "கருதலாத    முன்    குடுத்தலும்"   என்றார்.
எண்ணத்திலும்     விரைந்தது     செயல்      என்பதாம். 
கைத்தல்-வெறுத்தல், வெகுளல்.
  

(77)
 

7094.

மற்று, நீலன், அரக்கனை மாடு உறச் 

சுற்றி வால்கொடு, தோளினும், மார்பினும், 

நெற்றி மேலும், நெடுங் கரத்து எற்றலும், 

இற்று, மால் வரை என்ன, விழுந்தனன். 

 

மற்று- மேலும்;  நீலன்- நீலன் ஆனவன்; அரக்கனை-
பிரகத்தனை; வால் கொடு மாடு உறச் சுற்றி - வாலினால்
பக்கமெல்லாம்  அழுத்தி  சுற்றி;  தோளினும்  மார்பினும்
நெற்றி  மேலும்
-  தோள்களிலும் மார்பிலும் நெற்றியிலும்;
நெடுங்கரத்து எற்றலும் - நீண்ட கைகளால்  குத்தியபோது;
இற்றமால் வரை என்ன விழுந்தனன்-அடியோடு பெயர்ந்த
பெரிய மலைபோலப் பிரகத்தன் (மண்மேல்) வீழ்ந்தான்.
  

பிரகத்தன் கால் இற்று,  வீழ்தற்கு அடியோடு பெயர்ந்து
வீழ்ந்த  மலை  உவமையாயிற்று.  பிரகத்தன்- பெரிய மலை
போன்றவன். பெயருக்கேற்ப வீழ்ந்தான் என்பார். "மால்வரை 
என்ன வீழ்ந்தனன்" என்ற நயம் காண்க.
  

(78)
 

7095.

'இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன்' என்று 

அறிந்து, வானவர் ஆவலம் கொட்டினார்; 

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் 

முறிந்து, தம்தம் முது நகர் நோக்கினார்.* 

 

பிரகத்தன்   இறந்து  வீழ்ந்தனன்  என்று- பிரகத்தனும்
மடிந்து விழுந்தானே என்று; அறிந்து  வானவர் - (வியப்புடன்)
அறிந்து  தேவர்கள்; ஆவலம்   கொட்டினர் - (மகிழ்ச்சியால்)
ஆரவாரம்  செய்தார்கள்; வெறிந்த செம்மயிர் வெள் எயிற்று
ஆடவர்
-செறிந்த சிவந்த முடியையும் வெள்ளிய பற்களையுமுடைய
அரக்க  வீரர்கள்;  முறிந்து- மனம் உடைந்து; தத்தம் முதுநகர் 
நோக்கினர்
- தங்கள் தங்களுக்குரிய தொன்மை வாய்ந்த நகர்ப் 
பகுதிகளை நோக்கிச் சென்றனர்;