நீலனைப் பிரகத்தன் கதையால் அடித்தபோது "உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கினர்" (7091) இப்போது அவன் மடிவு, தேவர்களின் ஆரவாரத்திற்கு காரணமாயிற்று. புறமுதுகிட்டு ஓடத்துவங்கினர் என்னாது, "முதுநகர் நோக்கினர்" என நயம்பட மொழிந்த நேர்ததியை உணர்க. |
(79) |
தெற்கு வாயிலில் அங்கதன் நிகழ்த்திய போர் |
| 7096. | தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் |
| மல் குலாவு வயப் புயத்து அங்கதன் |
| நிற்கவே, எதிர் நின்றிலர் ஓடினார், |
| பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே. |
| |
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் - தெற்குக் கோட்டை வாயிலில் போர்க்குச் சென்ற அரக்கர்கள்; மல்குலாவும் வயப்புயத்து அங்கதன் - வலிமை விளையாடும் ஆற்றல் மிக்க தோள்களையுடைய அங்கதன்; நிற்கவே- போரிட்டு நிற்கையில்; பொன்குலாவு சுபாரிசன் - அழகு விளங்கும் சுபாரிசன் என்ற அணித்தலைவன்; பொன்ற- இறந்து விழுந்தவுடன்; எதிர் நின்றிலர் ஓடினர் - எதிரே நிற்க இயலாதவராய் ஓடினார்கள். |
நிசாசரர் - இரவில் சஞ்சரிப்பவர் அரக்கர். மல் - இங்கு வலிமையைக் குறித்தது. வலிமை எனும் ஆற்றல் விளையாடுகளம் அங்கதன் தோள்கள் என்று அழகுற மொழிந்தார். "அங்கதன் நிற்க அரக்கர் நின்றிலர்" என்றதில் உள்ள முரண் சுவையுணர்க. |
(80) |
மேலை வாயிலில் அனுமன் நிகழ்த்திய போர் |
| 7097. | நூற்று-இரண்டு எனும் வெள்ளமும், நோன் கழல் |
| ஆற்றல் சால் துன்முகனும், அங்கு ஆர்த்து எழ, |
| மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்,-- |
| காற்றின் மா மகன் கை எனும் காலனால். |
| |
திண்மேல் வாயிலில்- வலிமை மிக்க மேற்குக் (கோட்டை) வாயிலில்; நூற்றிரண்டு எனும் வெள்ளமும் - நூற்றிரண்டு வெள்ளம் அளவுடைய இராக்கதப் படை முழுவதும்;நோன் கழல்- வலிய வீரகண்டையணிந்த; ஆற்றல்சால் துன் முகனும் - வலிமை மிக்க துன்முகன் என்பவனும்; ஆர்த்து எழ- ஆர்ப்பரித்து எழ; மேவினர் - அங்கு வந்தவர்கள்; காற்றின் மாமகன் - வாயு மைந்தனாகிய |