பக்கம் எண் :

660யுத்த காண்டம் 

அனுமானுடைய;  கையெனும் காலனால் - கரம் என்னும் 
கூற்றுவனால்; வீடினர் - இறந்து பட்டனர்.
  

மேற்கு  வாயிலில்  நூற்றிரண்டு   வெள்ளம்   வானர 
சேனையுடன்  நிற்குமாறு  இந்திரசித்தினை    இராவணன் 
பணித்தமையை, அணிவகுப்புப் படலத்தில் (6965) காண்க. 
அவன் கீழ் உள்ள  படையில்  ஓர்  அணியின் தலைவன்
துன்முகன். நூற்றிருபது  வெள்ளமும்  மடிந்தது   என்பது
பொருள்  அன்று; நூற்றிருபது  வெள்ளத்தில்   துன்முகன்
உட்பட, அனுமனை எதிர்த்தவர்கள்  மடிந்தனர்   என்பது
கருத்து.
  

(81)
 

நால்திசைப் போர் பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல்
  

7098.

அன்ன காலை, அயிந்திர வாய் முதல் 

துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார், 

'மன்ன! கேள்' என, வந்து வணங்கினார்; 

சென்னி தாழ்க்க, செவியிடைச் செப்பினார்; 

 

அன்னகாலை-  அப்போது; அயிந்திர  வாய்முதல்
- இந்திர திசையாகிய கிழக்குத்  திசை  தொடங்கி   (நான்கு
வாயிலிலும்); துன்னுபோர் கண்ட-  நெருங்கிய   போரினை
(நேரில்)  பார்த்த;  தூதுவர்  ஓடினர்- தூதர்கள்  விரைந்து
ஓடிச் சென்று; வந்து- (இராமன் முன்பு) வந்து; வணங்கினர்
- பணிந்தவராய்;  சென்னி  தாழ்க்க-  இராவணன்   தலை 
வளைத்துக் கேட்க; மன்ன கேள் என- எங்கள் மன்னவனே
கேட்பாயாக என்று; செவி இடைச் செப்பினார்- இராவணன்
காதுகளில் சொன்னார்கள்.
 

அயிந்திரன் - இந்திரன். அவன் காக்கும் திசை  கிழக்கு.
போர்  நிலையினை  அவ்வப்போது  மன்னவர்கள் அறிந்து
கொள்ளுமாறு   படையமைந்திருந்தமையை   இப்பாடலால்
அறியலாம்.
  

(82)
 

7099.

'வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும், 

குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும், 

அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும், 

படச் சிதைந்தது, நம் படை' என்றனர். 

 

வடக்கு  வாய்தலில்  வச்சிரமுட்டியும் -  வடக்கு 
வாயிலின்  கண்  வச்சிரமுட்டி என்னும் படைத்தலைவனும்;
குடக்கு  வாயிலில்  துன்முகக்  குன்றமும்  -  மேற்கு 
வாயிலின்  கண்  துன்முகன்  என்னும்   மலை   எனலாம்
படைத்தலைவனும்; அடக்க அரும் வலத்து