பக்கம் எண் :

662யுத்த காண்டம் 

போன்ற  சேனைத்தலைவன்; கிளர் நிருதப் படை- எழுச்சி
கொண்ட அரக்கர்படை(யுடன் சென்று பொருது); பூழியான்-
புழுதியாய்   (தூளாய்)  ஆனான்;  உயிர்  விண்  புக்கது
என்றார்
- அவன் உயிர் வானுலகடைந்தது என்றார்கள்.
 

ஊழிக்காலத்தும் வெற்றி கொண்ட பிரகத்தனையும் வென்ற
வானரப் படையின் பேராற்றலை விளக்கினார்.
  

(85)
 

இராவணன் பெருஞ்சினம் கொள்ளல்
  

7102.

என்ற வார்த்தை, எரி புகு நெய் எனச் 

சென்று, சிந்தை புகுதலும், சீற்றத் தீ 

கன்று கண்ணின்வழிச் சுடர் கான்றிட, 

நின்று நின்று, நெடிது உயிர்த்தான்அரோ. 

 

என்ற  வார்த்தை-  என்று  ஒற்றர் கூறிய  வார்த்தைகள்;
எரிபுகு  நெய்  என-  தீயில் ஊற்றிய நெய் போல; சிந்தை
சென்று  புகுதலும்
-  மனத்துட்  சென்று  சேர்ந்தவுடனேயே;
சீற்றத்  தீ-  சினம்  என்னும்  தீயானது; கன்று- வெதும்பிய;
கண்ணின்   வழி-   கண்ணின்   வழியாக;  சுடர்கான்றிட-
பொறிகளைச்  சிந்த;  நின்று  நின்று நெடிது உயிர்த்தான் -
விட்டு விட்டுப் பெருமூச்செறிந்தான்.
  

வெகுளிச் சுவையின் மெய்ப்பொருளை இப்பாடலால் அறிக.
வானரங்களின் வெற்றிச் செய்தி நெருப்பில் ஊற்றிய நெய்.அந்த
நெருப்பு  கண் வழியாகப்  பொறிப் பொறியாய்ச் சிந்தியது என 
அழகுபட  உருவகித்தார்.  "பெருஞ்சினம்  புனற்படு நெருப்பில்
பொம்மெனச் சிதற" (பெருங். 1. 47-129)என்பார் கொங்குவேளிரும்.
 

(86)
 

7103.

மறித்தும், 'ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்?

இறுத்துக் கூறும்' என்றான்; 'இசை எங்கணும் 

நிறுத்தும் நீலன், நெடும் பெருஞ் சேனையை 

ஒறுத்து, மற்று அவனோடும் வந்து உற்றனன்; 

 

மறித்தும் -  மீண்டும்  (இராவணன்   தூதரைப்   பார்த்து);
ஆர்அவன்  ஆர்   உயிர்  வவ்வினான் -  யார்    அந்தப்
பிரகத்தனுடைய  உயிரைக்  கவர்ந்தவன்?;  இறுத்துக்  கூறும் -
விடை சொல்லுங்கள்; என்றான் - என்று கேட்டான்; எங்கணும்
-  (அதற்குத்  தூதர்கள்)    எல்லாத்   திசைகளிலும்;    இசை
நிறுத்தும்  நீலன்
-  தன்  புகழை  நிலை  நிறுத்தியுள்ள நீலன்
என்பவன்; நெடும் பெருஞ் சேனையை- நீண்ட