பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 663

பெரிய   (நம்)  படையை; ஒறுத்து  -  அழித்து;  மற்றும்
அவனோடும் வந்து உற்றனன்
-பிறகு அப் பிரகத்தனோடும்
போரிட வந்தடைந்தான்.
 

இச்செய்யுளின்  தொடர், அடுத்த செய்யுளின் "வீந்தனன்"
என்பதனோடு முடியும்.  "இசையெங்கணும்" என்பது தொடங்கி,
அடுத்த  பாடல் "வீந்தனன்"  என்பது முடியத் தூதுவர் கூற்று.
இறுத்தல்-விடையிறுத்தல்.
  

(87)
 

7104.

'உற்ற போதின் இருவரும், ஒன்று அல, 

கற்ற போர்கள் எலாம் செய்த காலையில், 

நெற்றிமேல், மற்று அந் நீலன் நெடுங் கையால் 

எற்ற, வீந்தனன்' என்ன இயம்பினார். 

 

உற்ற  போதின் - (நீலன்,  பிரகத்தனோடு) போரிட வந்த
போதில்; இருவரும் - அவ்விரு  வீரர்களும்;  ஒன்றல- ஒரு
வகையல்ல;  கற்ற போர்கள் எலாம்  செய்த  காலையில்-
(தாங்கள்)  பயின்றிருந்த  போர்  வகைகள்  எல்லாம்  புரிந்து
போரிடும் வேளையில்; அந்நீலன் - அந்த  நீலன்  என்பவன்;
நெற்றி   மேல்  -  பிரகத்தனுடைய     நெற்றியின்    மீது; 
நெடுங்கையால்  எற்ற - நீண்ட கையினால் தாக்க; வீந்தனன்
- மாண்டு  வீழ்ந்தனன்  (பிரகத்தன்);  என்ன  இயம்பினார் -
என்று விடையிறுத்தனர் (தூதுவர்).
  

போர்க்கல்வியைக்  கற்ற  தீரர்கள்    இருவரும்   என்பது
தோன்ற, "கற்ற போர்கள்" என்றும், அவை பல    திறத்தனவாய், 
கிளை விரித்தனவாய் இருந்தன என்பது தோன்ற, "கற்ற போர்கள்
எலாம்" என்றும் உரைத்தார். கற்ற  போர்-விற்போர்,   மற்போர், 
யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேர் செலுத்துதல் முதலியனவாம்.
 

(88)
 

7105.

'அன்னவன்னொடும் போன அரக்கரில் 

நல் நகர்க்கு வந்தோம், ஐய! நாங்களே' 

என்ன என்ன, எயிற்று, இகல் வாய்களைத் 

தின்னத் தின்ன, எரிந்தன திக்கு எலாம். 

 

ஐய-தலைவனே! அன்னவன்னொடும் போன அரக்கரில்-
அப்பிரகத்தனோடு  போருக்குப்  போன  அரக்க   வீரர்களில்;
நல் நகர்க்கு வந்தோம் நாங்களே- (நம்)  அழகிய இலங்கை
மாநகர்க்கு  (மீண்டு)  வந்தவர்கள்  நாங்கள்  மட்டுமே; என்ன
என்ன
- என்று தூதுவர் கூறக்கூற; இகல் வாய்களை எயிற்று-
(இராவணன்) தனது