பக்கம் எண் :

664யுத்த காண்டம் 

வினவிய  வாய்கள்   பத்தினையும்  பற்களினால்;   தின்னத்
தின்ன
- பன்முறை கடித்துக் கொண்ட போது; திக்கு எலாம்
எரிந்தன
- திசைகள் யாவும் தீப்பற்றி எரிந்தன.
 

மற்றவர்கள்  போரில்  இறந்தார்கள்   என்று  உரைக்கும்
துணிவின்றி, அப்பொருள்  தானாகத்  தோன்றுமாறு,  "நகர்க்கு
வந்தோம் நாங்களே" எனக் கூறிய சாதுரியம் பாராட்டற்குரியது.
  

(89)
 

இராவணன் போருக்குப் புறப்படுதல்
  

7106.

மாடு நின்ற நிருதரை, வன்கணான் 

ஓட நோக்கி, 'உயர் படையான் மற்று அக் 

கோடு கொண்டு பொருத குரங்கினால் 

வீடினான்!' என்று, மீட்டும் விளம்பினான்: 

 

மாடு  நின்ற  நிருதரை-   அருகில்  நின்ற   அரக்கர்களை;
வன்கணான் - கொடுமை  நிறைந்த  கண்களால் இராவணன்; ஓட
நோக்கி
-  (அஞ்சி அவர்)  ஓடுமாறு  உறுத்துப்  பார்த்துவிட்டு;
உயர்   படையான்-  சிறந்த  ஆயுதங்களையுடைய   பிரகத்தன்;
அக்கோடு கொண்டு- அந்த மரக்குச்சிகளைக் கொண்டு; பொருத
குரங்கினால்   வீடினான்
-  போரிட்ட    குரங்கால் மாண்டான்;
என்று    மீட்டும்   விளம்பினான் -   என்று     திரும்பவும் 
கூறிக்கொண்டான்.
  

ஒப்புயர்வற்ற    ஆயுதங்களை  ஏந்திய  பிரகத்தன்,   வெறுங்
கிளைகளை  ஏந்திய  குரங்குக்கா தோறறான்  எனும் இராவணனின்
நெஞ்சப்   பொருமல்   வெளிப்பட,  "உயர்   படையான்   மற்று
அக்கோடு  கொண்டு  பொருத  குரங்கினால் வீடினான்?" என்றார்.
மற்று-வினைமாற்றுப் பொருளில் வந்தது.
  

(90)
 

7107.

' "கட்டது, இந்திரன் வாழ்வை; கடைமுறை 

பட்டது, இங்கு ஓர் குரங்கு படுக்க" என்று 

இட்ட வெஞ் சொல் எரியினில், என் செவி 

சுட்டது; என்னுடை நெஞ்சையும் சுட்டதால்; 

 

கட்டது  இந்திரன்  வாழ்வை-  (இந்தப் பிரகத்தன்) வேருடன்
களைந்தது    இந்திரன்  வாழ்க்கையை;    கடைமுறை-  இறுதியில்;
இங்குபட்டது-  இப்போது  அவன்  அழிந்ததோ;  ஓர்  குரங்கு
படுக்க
- ஒரு வானரம் கொன்றதனால்; என்று இட்ட  வெஞ்சொல்
- என்று (இத்தூதர்கள்) தந்த கொடுஞ்சொல்லாகிய;  எரியினில் -