யுத்த காண்டம் |
கம்பராமாயணத்தின் ஆறாவது காண்டம் யுத்த காண்டம். இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதியாதலின் யுத்த காண்டம் எனப் பெயர் பெற்றது. |
இராமன் இலங்கைக்குச் செல்வதற்குமுன் தமிழ்நாட்டின் கடற்பகுதியைக் காண்பது முதல் இராவண வதம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வந்து முடிசூடியது வரை உள்ள நிகழ்ச்சிகளைக் கூறுவது. |
கடல்காண் படலம் முதலாக விடை கொடுத்த படலம் ஈறாக 39 படலங்களைக் கொண்டது யுத்த காண்டம். |
கடவுள் வாழ்த்து |
அறுசீர் விருத்தம் |
| 6059. | 'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்; |
| 'பல' என்று உரைக்கின், பலவே ஆம்; |
| 'அன்றே' என்னின், அன்றே ஆம்; |
| 'ஆமே' என்னின், ஆமே ஆம்; |
| 'இன்றே' என்னின், இன்றே ஆம்; |
| 'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்; |
| நன்றே, நம்பி குடி வாழ்க்கை! |
| நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா! |
| |
ஒன்றே என்னின் ஒன்றேயாம் - ஒன்று என்று கூறினால் ஒன்றேயாகும்;பல என்று உரைக்கின் பலவே ஆம் - பல என்று கூறின் பலவாகும்;அன்றே என்னின் அன்றே ஆம் - இத்தன்மை உடையதல்ல என்று கூறினால் அவ்வாறே ஆகும் ;ஆமே என்னின் ஆமே யாம் - இன்ன தன்மை உடையது என்று கூறினால் அந்தத்தன்மை உடையதாயிருக்கும்; இன்றே என்னின் இன்றே யாம் - இல்லை என்று சொன்னால் இல்லாததாகும்;உளது என்று உரைக்கில் உளதேயாம் - உள்ளது என்று கூறினால் உள்ளதே |