பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 751

நிலைதடுமாறின;    குலையா  -   என்றும்   நிலைகுலையாத;
தேவதேவனும்-  சிவபெருமானும்;  விரிஞ்சனும் - பிரமனும்;
சிரதலம் குலைந்தார் - தலை நடுக்கம் உற்றனர். 
 

(225)
 

7242.

ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ, 

ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப, 

வீழின் மீச்செலின், மண்ணையும் விண்ணையும்  

தொளைப்ப,

ஏழு வெஞ் சரம், உடன் தொடுத்து, இராவணன்  

எய்தான்.

 

ஊழி வெங்கனல் ஒப்பன - (அப்போது)  ஊழிக்காலத்துத்
தோன்றும் கொடுந்தீயை ஒப்பனவும்; துப்பன உருவ- பவளம்
போன்ற நிறம் உடையனவும்; ஆழி  நீரையும் குடிப்பன- கடல்
நீரையும்  பருக  வல்லனவும்;  திசைகளை அளப்ப - திக்குகள்
யாவையும் அளக்க வல்லனவும்; வீழின்  மண்ணையும்- கீழே
விழுந்தால்  பூமியையும்; மீச்செலின்  விண்ணையும் - மேல்
நோக்கிப் பாய்ந்தால் வானத்தையும்; தொளைப்ப- தொளைக்க
வல்லனவும்  ஆகிய; வெம்சரம்  ஏழும் - கொடிய கணைகள்
ஏழினையும்; உடன் தொடுத்து - சேரத் தொடுத்து; இராவணன்
எய்தான்
- இராவணன் (இராமபிரான் மேல்) விடுத்தான். 
 

(226)
 

7243.

எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு 

செய்து வெஞ் சரம் ஐந்து ஒரு தொடையினில்  

சேர்த்தி,

வெய்து கால வெங் கனல்களும் வெள்குற,  

பொறிகள்

பெய்து போம் வகை, இராகவன் சிலைநின்று  

பெயர்த்தான்.

 

எய்த   வாளியை  - (இராவணன்)   விடுத்த  அம்புகளை;
ஏழினால்- தன்னுடைய  ஏழு  அம்புகளால்; ஏழினோடு ஏழு
எய்து
- (ஒவ்வொன்றும்)  ஏழேழு  நாற்பத்தொன்பது  துண்டுகள்
ஆகுமாறு   துண்டித்து; ஒரு    தொடையினில்  -  ஒருமுறை
தொடுக்கையில்; வெம்சரம் ஐந்து சேர்த்தி - கொடுங்கணைகள்
ஐந்தினையும்    ஒருசேரப்     பொருத்தி;    வெய்து    கால
வெங்கனல்களும்
- வெய்யது ஆகிய ஊழிக்கால நெருப்புகளும்;
வெள்குற
- நாணுமாறு;