பக்கம் எண் :

752யுத்த காண்டம் 

பொறிகள்  பெய்து - தீப்பொறிகள்  கக்கியவாறு;போம்வகை
- செல்லும் வண்ணம்; இராகவன் சிலை நின்று பெய்தான் -
இராமபிரான் தன் வில்லினின்று எய்தான்.
 

(227)
 

7244.

வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி, 

ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும், ஐ-இரண்டு  

அம்பு

தோளில் நாண் உற வாங்கினன், துரந்தனன்; சுருதி 

ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால்  

அறுத்தான்.

 

ஆளி மொய்ம்பின் அவ்அரக்கனும்- ஆளியைப் போன்ற
வலிய அரக்கனாம் இராவணனும்; வாளி ஐந்தையும்- (இராமபிரான்
விடுத்த) ஐந்து அம்புகளையும்; ஐந்தினால் - ஐந்து அம்புகளினால்;
விசும்பிடை மாற்றி- ஆகாயத்திலேயே உரு அழித்து; ஐயிரண்டு
அம்பு
- பத்துப் பாணங்களை; தோளில் நாண்  உற வாங்கினன்
துரந்தான்
-  தன்   தோளில்  நாண்  பொருந்துமாறு  வளைத்துச்
தலைவனான   இராமபிரானும்;   அவற்றையும்-  அந்தப் பத்துக்
கணைகளையும்;     அவற்றினால்    அறுத்தான்  -   பத்துப்
பாணங்களினால் அறுத்துத் தள்ளினான்.
 

(228)
 

7245.

அறுத்து, மற்று அவன் அயல் நின்ற அளப்ப அரும் 

அரக்கர்.

செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால்  

சிந்தி,

இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி, 

ஒறுத்து, மற்று அவர் தலைகளால் சில மலை  

உயர்த்தான்.

 

அறுத்து -      (இராமபிரான்   அரக்கன்    கணைகளை)
அறுத்தெறிந்து; மற்று -பின்பு; அவன் அயல் நின்ற அளப்பரும்
அரக்கர்
-  அந்த  இராவணனின்  அருகே நின்ற அளத்தற்கரிய
அரக்கர்;  செறுத்து விட்டன படை எலாம் - வெகுண்டு விட்ட
படைக்கலங்கள் யாவற்றையும்; கணைகளால் சிந்தி - அம்புகளால்
சிதறடித்து; இறுத்து  வீசிய  கிரிகளை- (அவர்கள்) அகழ்ந்து
வீசிய மலைகளை யெல்லாம்; எரி உக நூறி ஒறுத்து - தீப்பொறி