சிதறுமாறு பொடி செய்து ஒழித்து; அவர் தலைகளால் சிலமலை உயர்த்தான் - அந்த அரக்கர்களுடைய (அறுபட்ட) தலைகளால் சிலமலைகள் உயர்ந்து தோன்றுமாறு செய்தான். |
எல்லோரும் கல்லால் மலை செய்யலாவது இயல, பெருமான் தலையால் மலைசெய்ய வல்லான் என அவனது "அகடிதகடநா சாமர்த்தியம்" கூறியவாறு. தலைமலை ஒன்றல்ல என்பார், "சிலமலை செய்தான்" என்றார். |
(229) |
| 7246. | மீனுடைக் கருங் கடல் புரை இராக்கதர் விட்ட |
| ஊனுடைப் படை, இராவணன் அம்பொடும் ஓடி, |
| வானரக் கடல் படா வகை, வாளியால் மாற்றி, |
| தானுடைச் சரத்தால் அவர் தலைமலை தடிந்தான். |
| |
மீன் உடைக் கருங்கடல் புரை இராக்கதர் - மீன்களையுடைய கருங்கடலினைப் போன்ற (பெருந்திரளான) இராக்கதர்;விட்ட ஊனுடைப் படை - செலுத்திய தசை படிந்த படைக்கருவிகள்; இராவணன் அம்பொடும் ஓடி - இராவணனுடைய அம்புகளுடனே ஓடி; வானரக் கடல் படா வகை- வானர சேனை என்னும் கடலின் மீது படாத வண்ணம்; வாளியான் மாற்றி - (தன்னுடைய) அம்புகளால் விலக்கி; தான் உடைச்சரத்தால்- தன்னுடைய வேறு அம்புகளால்; அவர் தலை மலை - அரக்கர்களுடைய தலை எனும் மலைகளை; தடிந்தான் - அழித்துக் குவித்தான் (பெருமகன்). |
(230) |
| 7247. | இம்பரான் எனில், விசும்பினன் ஆகும், ஓர் |
| இமைப்பில்; |
| தும்பை சூடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்; |
| வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்;--மேல் |
| நின்றான் |
| அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும், |
அனுமன். |
| |
மேல் நின்றான் - தன் புயத்தின் மீதிருந்த இராமபிரானுடைய; அம்பின் முன் செலும் - அம்பின் (வேகத்திற்கும்) முந்திச் செல்லுவான்; மனத்திற்கும் முன் செலும் அனுமன் - மனவேகத்திற்கும் முன் செல்கின்றவனான அனுமன்; ஓர் இமைப்பில் - ஒரு கணப்பொழுதில்; இம்பரான் எனின் - இவ்வுலகத்தினன் என நினைவோமாயின்;விசும்பினன் ஆகும்- |