ஆகாயத்தில் அடுத்த கணத்தில் இருப்பவன் ஆவான்; தும்பை சூடிய இராவணன் முகம் தொறும் தோன்றும் - தும்பை மாலையைச் சூடிப் போரிடுகின்ற பத்து தலைகளின் முன்பும் (மறுகணம்) தோன்றுவான்; வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும் - (அடுத்தகணம்) கொதிக்கின்ற வஞ்சகராம் அரக்கர் விழிகள் தோறும் காட்சிப்படுவான். |
ஓர் இமைப்பின்-இடைநிலைத்தீபகம். |
(231) |
போர்க்களக் காட்சிகள் |
| 7248. | ஆடுகின்றன, கவந்தமும்; அவற்றொடும் ஆடிப் |
| பாடுகின்றன, அலகையும்; நீங்கிய பனைக் கைக் |
| கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு |
| ஓடுகின்றன, உலப்பு இல, உதிர ஆறு உவரி. |
| |
கவந்தமும் ஆடுகின்றன - தலையற்ற உடல்கள் (களத்தில்) கூத்தாடத் தொடங்கின;அலகையும் - பேய்களும்; அவற்றொடும் ஆடி- அந்தக் கவந்தங்களுடனே கூடி ஆடி;பாடுகின்றன- பாடத் தொடங்கின; உலப்பில உதிரம் ஆறு- வற்றுதலில்லாத இரத்தப் பெருக்குகள்; பனைக்கை துன்றிய கோடுநீங்கிய கரிகளும் - பனை போன்ற கரங்களுடன் முன்பு நெருங்கியிருந்த கொம்புகள் நீங்கப் பெற்ற யானைகளையும்; பரிகளும் - குதிரைகளையும்; தலைக்கொண்டு - தம்மிடம் அகப்படுத்திக் கொண்டு; உவரி ஓடுகின்றன-கடலை நோக்கி ஓடிப் பாய்வன ஆயின. |
(232) |
| 7249. | அற்ற ஆழிய, அறுப்புண்ட அச்சின அம்போடு |
| இற்ற கொய் உளைப் புரவிய, தேர்க் குலம் எல்லாம்; |
| ஒற்றை வாளியோடு உருண்டன, கருங் களிற்று |
| ஓங்கல்; |
| சுற்றும் வாசியும் துமிந்தன, அமர்க் களம் தொடர்ந்த. |
| |
அமர்க்களம் தொடர்ந்த - போர்க்களத்தில் தொடர்ந்து வந்த; தேர்க்குலம் எல்லாம்- தேர்க்கூட்டங்கள் யாவும்; அற்ற ஆழிய - துண்டித்த சக்கரங்களை உடையனவும்; அறுப்புண்ட அச்சின- முறிந்து போன அச்சுக்களையுடையனவும்; இற்ற கொய் உளைப் புரவிய- இறந்து போன கொய்து அலங்கரிக்கப் பெற்ற பிடரி மயிர்களையுடைய குதிரைகளையுடையனவும்; கருங்களிற்று |