பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 755

ஓங்கல் -  கரிய   யானைகள்   என்னும்   மலைகள்;  ஒற்றை
வாளியோடு  உருண்டன
- ஒரே  அம்புகள்  பட்டு (களத்தில்)
உருண்டு கிடந்தன; சுற்றும் வாசியும் துமிந்தன- சுற்றித்திரியும்
குதிரைகளும் துண்டுபட்டுக் கிடந்தன.
 

"அமர்க்களந்தொடர்ந்த" என்பது கடைநிலைத் தீபகம்."
 

(233)

7250.

தேர் இழந்து, வெஞ் சிலைகளும் இழந்து, செந்

தறுகண்

கார் இழந்து, வெங் கலின மாக் கால்களும் இழந்து, 
சூர் இழந்து, வன் கவசமும் இழந்து, துப்பு இழந்து, 
தார் இழந்து, பின் இழந்தனர் நிருதர், தம் தலைகள்.
 

நிருதர் - அரக்கர்கள்; தேர் இழந்து- (தாம் ஏறி வந்த)
தேர்களையும்  இழந்து;   வெம்சிலைகளும்  இழந்து- தாம்
பிடித்திருந்த  விற்களையும்  இழந்து;  செந்தறு கண் - சிவந்த
கொடிய கண்களுடன் கூடிய; கார்  இழந்து - மேகம் போன்ற
யானைகளையும் இழந்து; வெம்கலின மாக்கால்களும் இழந்து
- கொடிய கடிவாளமுடைய குதிரைகளின் கால்களையும் இழந்து;
சூர்  இழந்து
- சூரத்தனத்தையும் இழந்து;   வன்  கவசமும்
இழந்து
- வலிய   கவசங்களையும்   இழந்து;   துப்பிழந்து -
வலிமையையும் இழந்து;தார் இழந்து- மாலைகளையும் இழந்து;
பின் தம் தலைகள் இழந்தனர்- பிறகு (இறுதியாக) தம்முடைய
தலைகளையும் இழந்தழிந்தனர். 
 

(234)
 

7251. 

அரவ நுண் இடை அரக்கியர்; கணவர்தம் அற்ற, 

சிரமும் அன்னவை ஆதலின், வேற்றுமை தெரியா, 

புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி, 

கரவு இல் இன் உயிர் துறந்தனர், கவவுறத் தழுவி. 

 

அரவ நுண் இடை அரக்கியர்- பாம்பு போன்று நெளியும்
நுண்ணிய இடைகளையுடைய அரக்கிமார்கள்; அற்ற தம் கணவர்
சிரமும்
- உயிரற்று இறந்து போன தம்  கணவர்களின் தலையும்;
அன்னவை ஆதலின்- குதிரை, யானை போன்ற விலங்குகளின்
தலைகளே   ஆதலின்;   வேற்றுமை  தெரியா - தம்  கணவர்
தலைகட்கும்  அவற்றின்  தலைகட்குமிடையே  வேறுபாடு உணர
இயலாமையால்; புரவியின்  தலை பூட்கையின் தலை இவை
பொருத்தி
- குதிரையின் தலைகள், யானையின் தலைகள்