| நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க, |
| கொன்று வீழ்த்தினது--இராகவன் சரம் எனும் |
கூற்றம். |
| |
இராகவன் சரம் எனும் கூற்றம்- இராமபிரானுடைய காலன் போன்ற அம்பு; ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந்தலை உருட்டி- இலட்சம் அரக்கருடைய கொடிய தலைகளை அறுத்து உருளச் செய்து;சென்று தீர்வில - அதனோடு முடிந்து விடாமல்; எனைப் பல கோடியும் சிந்தி - (மற்றும்) எத்தனையோ பலகோடி வீரர்களையும் அழித்து; நின்ற தேரொடும் - மீந்து நின்ற தேர் ஒன்றோடும்; இராவணன் ஒருவனும் நிற்க - இராவணன் ஒருவனும் நிற்க - இராவணன் ஒருவனே மிஞ்சி நிற்க; கொன்று வீழ்த்தினது - கொன்றழித்தது. |
(237) |
| 7254. | தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி, |
| பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும் |
| பிறங்கி, |
| காரும் வானமும் தொடுவன பிணக் குவை |
| கண்டான்,-- |
| மூரி வெஞ் சிலை இராவணன்--அரா என |
முனிந்தான். |
| |
மூரி வெஞ்சிலை இராவணன் - வலிமை மிக்க கொடிய வில்லையுடைய இராவணன்; தேரும் யானையும் புரவியும் அரக்கரும்- தேர்களும், யானைகளும் குதிரைகளும் இராக்கதரும்; தெற்றி- எங்கும் நெருங்கி (ஒன்றோடு ஒன்று முட்டி);பேரும் ஓர் இடம் இன்றென - நகர்வதற்கு வேறோர் இடம் இல்லை யென்னும்படி; திசைதொறும் பிறங்கி - திக்கெல்லாம் தோன்றுமாறு; காரும் வானமும் தொடுவன பிணக்குவை கண்டான் - மேகத்தையும் வானத்தையும் சென்று தொடுமாறு குவிந்த பிணக்குவியல்களைக் கண்டவனாய்; அரா என முனிந்தான் - பாம்பு போல வெகுண்டான். |
(238) |
| 7255. | முரண் தொகுஞ் சிலை இமைப்பினில் முறையுற |
| வாங்கி, |
| புரண்டு தோள் உறப் பொலன் கொள் நாண் |
| வலம்படப் போக்கி, |