| திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து |
| இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட, |
எய்தான். |
| |
பொலன் கொள் நாண்- அழகைக் கொண்ட வில்லின் நாண் ஆனது; புரண்டு தோள் உற - புரண்டு தோளிலே தோயும்படி; முரண் தொகும்சிலை - வலிமையெல்லாம் ஒருங்கு திண்டுள்ள வில்லினை; இமைப்பினில் முறை உறவாங்கி - இமைக்கும் நேரத்திலே முறைப்படி வளைத்து; திரண்ட வாளிகள் இரண்டு- திரண்டெடுத்த உருவினையுடைய இரண்டு அம்புகளை; வலம்படப் போக்கி - வலிமை தோன்ற விடுத்து; சேவகன் - இராமபிரானுடைய; மரகதச் சிகரத்து இரண்டு தோளினும்- மரகத மலைச் சிகரம் போன்ற இரண்டு தோள்களிலும்; புக்கு அழுந்திட எய்தான்- புதையுமாறு எய்தான். |
(239) |
| 7256. | முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன், |
| மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து, உற |
| வாங்கி, |
| இறுதி எய்தும் நாள், கால் பொர, மந்தரம் |
| இடையிட்டு |
| அறுவது ஆம் என, இராவணன் சிலையினை |
அறுத்தான். |
| |
முறுவல் எய்திய முகத்தினன் - புன்முறுவல் பூத்த முக மலரினையுடையவனாய்;முளரி அம் கண்ணன்- செந்தாமரை மலரையொத்த அழகிய கண்களையுடைய இராமபிரான்; மறு இலாதது ஓர் வடிக்கணை தொடுத்து- குற்றமற்றதோர் கூரிய அம்பினைப் பூட்டி; உறவாங்கி - (வில்லினை) நன்கு வளைத்து; இறுதிநாள் கால்பொர- உகாந்தகாலக் காற்று வீசும்போது; மந்தரம்- மந்தரமலை;இடையிட்டு அறுவது ஆம் என - இடையிலே இற்று ஒடிவது போல;இராவணன் சிலையினை அறுத்தான் - இராவணனுடைய வில்லினை அறுத்து வீழ்த்தினான். |
முறுவல் எய்திய முகத்தினனாய் இராமன் நிகழ்த்தியபோர் "அலகிலா விளையாட்டு உடையான் (கம்ப.1) என்பதன் அரும்பொருளை உணர்த்தியது. பிராட்டியின் கூற்றிலும், (5188) இராவணன் மாலியவானிடம் கூறிய கூற்றிலும் (7258) இந்நிலை அறிக.
|
(240) |