பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 759

7257.

மாற்று வெஞ் சிலை வாங்கினன், வடிம்புடை  

நெடுநாண்

ஏற்றுறா முனம், இடை அறக் கணைகளால் எய்தான்; 

காற்றினும் கடிது ஆவன, கதிர் மணி நெடுந் தேர் 

ஆற்று, கொய் உளைப் புரவியின் சிரங்களும்  

அறுத்தான்.

 

மாற்று வெஞ்சிலை வாங்கினன் - (மாற்றாக) பிறிதொரு
கொடிய வில்லினை வளைத்தவனாய்; வடிம்புடை நெடுநாண்-
தழும்பினைத் தரவல்ல நீண்ட நாணினை; ஏற்றுறா முன்னம்-
(இராவணன்) ஏற்றுவதற்கு முன்பாக; இடையறக் கணைகளால்
எய்தான்
- (இராமபிரான் இராவணனின் வில்லானது) நடுவிலே
முறிந்து போம்படி அம்புகளால் அடித்தான்;காற்றினும் கடிது
ஆவன
- (மேலும்)   காற்றிலும்  வேகமாகச்  செல்வனவும்;
கதிர்மணி   நெடுந்தேர் - ஒளிமிக்க  மாணிக்கங்கள் பதித்துச்
செய்யப் பெற்றவையுமான பெரிய தேரினை; ஆற்று- சுமந்து
ஓடுபவையுமான;   கொய்உளைப்   புரவியின் சிரங்களும்
அறுத்தான்
-   கொய்யப்பெற்ற  பிடரிகளையுடைய (தேர்க்)
குதிரைகளின் தலைகளையும் அறுத்தெறிந்தான் (பெருமான்). 
 

(241)
 

7258.

மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறாமுன்னம், 

இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான்; 

கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபடக்  

குறைத்தான்;

கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான். 

 

மற்றும்- மேலும்; வெம்படை வாங்கினன்- (இராவணன்)
(வேறொரு) கொடிய ஆயுதம் எடுத்து; வழங்குறா முன்னம்-
விடுதற்கு முன்பேயே; இற்று இடையற அவிந்து உக - அது
இடையிலேயே   முழுதும்   சிதைந்து   விழுமாறு; எரிகணை
எய்தான்
- எரிகின்ற அம்பு ஒன்றினை (இராமபிரான்) எய்தான்;
கொற்ற வெண்குடை- (மேலும் அம்புகளால்) வெற்றிக் குடை;
கொடியொடும் துணிபட - (தன்) கொடியோடு துண்டிக்குமாறு;
குறைத்தான் - வெட்டினான்; கற்றை அம் சுடர்க் கவசமும்
- அழகிய   ஒளிமிக   உமிழும்   கவசத்தையும்; கட்டு அற
அழித்தான்
- பூட்டு அற்று விழுமாறு சிதைத்தான். 

 (242)