பக்கம் எண் :

762யுத்த காண்டம் 

சென்றதனால் சென்று; குரை  கடல் குளித்த அக்கொள்கை
- (அம்மகுடம்)   ஒலிக்கும்  கடலில்  அழுந்திய  அத்தன்மை;
மண்டலம் தொடர் -  வட்ட வடிவம் பொருந்திய;  வயங்கு
வெங்கதிரவன்
- ஒளிமிகும் வெய்ய கதிர்களையுடைய சூரியன்;
தன்னை   உண்ட - தன்னை   விழுங்கிய;   கோளொடும்
ஒலிகடல் வீழ்ந்ததும் ஒக்கும்
- கேது என்னும் கோளோடு
ஒலி கடலில் வீழ்ந்ததையும் ஒக்கும்.
 

சூரியன்  கிரகணம்  பற்றிய நிலையில் கடலிடை மறைவதும்
உண்டாதலின், இராமபாணம் தூக்கிச் சென்ற இராவணன் மகுடம்
கடலில் வீழ்ந்து மறைவது அதற்கு உவமையாயிற்று. இராவணன்
மகுடம் சூரியனுக்கும், இராம சரம் கேது எனும் செம்பாம்பிற்கும்
உவமைகள் ஆயின. தற்குறிப்பேற்ற அணி.
 

(246)
 

இராவணன் மகுடம் இழந்து நாணி நிற்றல்
 

7263.

சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி  

துறந்தான்;

எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த 

அல்லும் ஒத்தனன்; பகலும் ஒத்தனன்; அமர்  

பொருமேல்,

வெல்லும் அத்தனை அல்லது, தோற்றிலா விறலோன். 

 

அமர்  பொருமேல் - போரிட்டான்  என்றால்; வெல்லும்
அத்தனை   அல்லது
- வெல்லுமளவே  அன்றி;  தோற்றிலா
விறலோன்
  -   தோல்வியையே    யறியாத   வலியோனாகிய
இராவணன்; சொல்லும் அத்தனை அளவையின் - சொல்லும்
பொழுதிற்குள்; மணி முடி துறந்தான்- (தன்) மணி மகுடங்களை
(இராமசரத்தால்)   இழந்து   போனான்; எல்  இமைத்து எழு
மதியமும்
- ஒளி  உமிழ்ந்து எழுகின்ற சந்திரனையும்; ஞாயிறும்-
சூரியனையும்; இழந்த -  முறையே  இழக்கப் பெற்ற;  அல்லும்
ஒத்தனன்  பகலும்  ஒத்தனன்
- இரவினையும் பகலினையும்
நிகர்த்து விளங்கினான்.
 

(247)
 

7264.

மாற்ற அருந் தட மணி முடி இழந்த வாள் 

அரக்கன்,-- 

ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன்எனினும், 

ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப,

போற்ற அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும்--

போன்றான்.