பக்கம் எண் :

766யுத்த காண்டம் 

7268.

'உடைப் பெருங் குலத்தினரொடும், உறவொடும்,  

உதவும்

படைக்கலங்களும், மற்றும் நீ தேடிய பலவும், 

அடைத்து வைத்தன திறந்துகொண்டு  

ஆற்றுதிஆயின்,

கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறு தொழில் 

கீழோய்!

 

சிறுதொழில் கீழோய் - இழிசெயல்கள் புரியும் கீழ்மகனே!;
உடைப் பெருங் குலத்தினரொடும் - உன்னுடைய பேரினத்தவ
ரோடும்;     உறவொடும்  -    சுற்றத்தாரோடும்;     உதவும்
படைக்கலங்களும் 
  -    (உனக்கு    இனி)     உதவவல்ல
படைக்கருவிகளையும்; மற்றும் நீ தேடிய பலவும் - மற்றும் நீ
தேடிப் பல இடங்களில் வைத்துள்ள சேனைகளையும்; அடைத்து
வைத்தன   திறந்து   கொண்டு 
- நகரின் உள்ளே அடக்கி
வைத்துள்ள   உன்   பலப்பொருள்கள்   யாவற்றையும்  திறந்து
கூட்டிக்கொண்டு;   ஆற்றுதியாயின்  - போர் புரியும் ஆற்றல்
உடையவன்   நீயானால்;   கிடைத்தி   -   (போர்க்கு வந்து)
கிட்டுவாயாக; அல்லையேல் ஒளித்தி - உனக்கு அந்த ஆற்றல்
இல்லையாயின்   கோட்டைக்குள்  ஒளிந்து  கொள்;  (என்றான்
இராமபிரான்).
 

பிறர் மனை  நயத்தல்  முதலிய புன் செயல் புரிந்தமையால்
இராவணனை,   சிறு தொழிற்  கீழோய்! என்றார். "ஒழுக்கத்தின்
எய்துவர்  மேன்மை;  இழுக்கத்தின்  எய்துவர்  எய்தாப்  பழி"
(குறள். 137)  என்பர்  வள்ளுவப்  பெருந்தகை. "அறவையாயின்
நினது   எனத்திறத்தல்;  மறவையாயின்  போரொடு   திறத்தல்"
(புறம். 44)  என்னும்  புறப்பாடல்  அடிகள்  கவிஞர்க்கு இங்கு
நினைவு வந்திருத்தல் வேண்டும் குலத்தினர்-அரக்க இனத்தினர்.
உறவு-தம்பி, மக்கள் முதலியோர்; படைக்கலங்கள் - வில், வேல்,
ஈட்டி, தோமரம் முதலியவை. மற்றும் நீ தேடிய பலவும் என்றது
- தேர்  முதலிய  நால்வகைப்  படைகளையும்  மூலபலப் படை
முதலியவற்றையும்,  "ஆற்றுதியாயின்  கிடைத்தி;  அல்லையேல்
ஒளித்தி" - சந்த நயம் சுவைத்து மகிழ்க. தறுகண்மை, இசைமை
அடியாகப் பிறந்த பெருமிதத்தைச் சார்ந்தன இராமனது உரைகள். 
 

(252)
 

7269.

'சிறையில் வைத்தவள்தன்னை விட்டு, உலகினில் 

தேவர்

முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல்

 பேர்