| இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து |
| இருத்தியேல், இன்னும், |
| தறையில் வைக்கிலென், நின் தலை வாளியின் |
| தடிந்து. |
| |
சிறையில் வைத்தவள் தன்னை விட்டு- உன்னால் சிறை வைக்கப்பட்டுள்ள சீதாதேவியினை விடுதலை செய்து; நின் தம்பியை - உனக்குப் பின் பிறந்தவனான தம்பி வீடணனை; உலகினில் தேவர் முறையில் வைத்து - உலகின் கண் தேவராகிய அந்தணர் தகுதியில் வைத்து; இராக்கதர் முதல் பேர் இறையில் வைத்து - இராக்கதர்க்கு முதல்வனாகும் பேரரசப் பதவியில் வைத்து; அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் - அவ்வீடணனுக்கு ஏவல் பணிபுரிந்து இருப்பாயானால்; இன்னும் - (இப்போது மட்டுமன்றி) இனிமேலும்; நின்தலை வாளியின் தடிந்து - உன்னுடைய தலையை (என்) அம்பால் துண்டித்து; தரையில் வைக்கிலென் - தரையின் மேல் வைக்க மாட்டேன். |
இதுவும் தறுகண்மையால் வந்த பெருமிதம். உலகினில் தேவர் - பூசுரர் எனப்படும் அந்தணர். |
(253) |
7270. | 'அல்லையாம்எனின், ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற |
| வல்லையாம்எனின், உனக்கு உள வலி எலாம் |
| கொண்டு, |
| "நில், ஐயா!" என நேர் நின்று பொன்றுதிஎனினும், |
| நல்லை ஆகுதி; "பிழைப்பு இனி உண்டு" என |
| நயவேல். |
| |
அல்லையாம் எனின்- (நான் மேலே கூறிய வண்ணம் செய்ய) விரும்பவில்லையெனில்; ஆர் அமர் ஏற்று நின்று- அரிய போரை மேற்கொண்டு; ஆற்றவல்லையாம் எனில் - போர்புரிய வல்லமையுடையாய் என்றால்; உனக்கு உள வலி எலாம் கொண்டு - உனக்கு உள்ள ஆற்றல் அனைத்தையும் மேற்கொண்டு; நில் ஐயா என - 'எதிர்த்து நில் ஐயா' என்று (என்னிடம்) கூறி; நேர்நின்று பொன்றுதி - என் எதிரே நின்று போரிட்டு ஒழிவாயாக; எனினும் - அவ்வாறு போரிட்டு ஒழிந்தாய் ஆயினும்; நல்லை ஆகுதி - நல்லவன் ஆவாய்; இனிப் பிழைப்பு உண்டு என நயவேல் - (ஆனால்) இனி, (போர்புரிந்து) பிழைத்துக் கொள்ளலாம் என்று மட்டும் விரும்பி நில்லாதே. |