நிற்கிறது. யாரையும் நோக்காது குனிந்து செல்லும் இராவணன் அங்கும் பூமகள் என்ற பெண்ணைப் பார்க்க நேர்ந்தது என்பது ஓர் நயம். |
(3) |
| 7275. | நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் |
| எல்லாம் |
| வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி |
| ஒத்த;-- |
| கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு, |
| அற்றைநாள், தன் |
| தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு |
| அங்குத் தொடர்கிலாமை. |
| |
கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு- ஒன்பது கோள்களையும் ஒருங்கே சிறைவைத்து அடிமைப்படுத்தி ஆண்ட வெற்றி வீரனான இராவணனுக்கு; அற்றை நாள் - தோற்றுத் திரும்பிய அந்த நாளில்; நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர்- பகலில் ஒருசேர மலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்தினையுடைய மகளிரது;நயனம் எல்லாம் வாள் ஒத்த - கண்கள் எல்லாம் வாட்படை போல் துன்பத்தை மிகுவித்தன; மைந்தர் வார்த்தை- மக்களுடைய சொற்கள்; இராகவன் வாளி ஒத்த - இரகுகுல நாயகனின் அம்பு போல் துன்பம் தந்தன; இதற்கு காரணம் என்னையோ எனின். தோள் ஒத்த துணை மென் கொங்கை - தோள் வலிக்குச் சார்ந்த மார்பில் அமைந்த இரட்டை மென் கொங்கைகளையுடைய வெற்றித் தெய்வமாகிய கொற்றவையின்; நோக்கு அங்குத் தொடர்கிலாமை- வெற்றி நோக்கு அவனிடத்தில் இதுவரை தொடர்ந்து இப்போது தொடர்கிலாமையேயாகும். |
கொற்றவையின் வெற்றி நோக்கால் இதுவரை முக்கணான் முதலினோரைப் புக்க போரெல்லாம் வென்று நின்ற இராவணன் தாயினும் தொழத்தக்காள் மேல் தங்கிய காதல் நோயாலும், இராகவன் முனிவாலும் அவ்வெற்றி நோக்கை இழந்ததை ஆசிரியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார். |
(4) |
| 7276. | மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும், |
| தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும், |
| எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர் |
| சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான். |