பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 775

மந்திரச்   சுற்றத்தாரும்-  அடுக்கு  மீது  அடாதது என
உரைக்கும்     மந்திரத்      துணையானவர்களும்;   வாணுதல்
சுற்றத்தாரும்- ஒளிபொருந்திய  நெற்றியையுடைய  மனைவியரும்;
தந்திரச் சுற்றத்தாரும் - சேனைத்தலைவர்களாகிய துணைவரும்;
தன்   கிளைச்  சுற்றத்தாரும்  -  உறவு  முறையானவர்களும்;
எந்திரப் பொறியின் நிற்ப - இதுவரை இராவணனிடம் காணாத
தன்மை கண்டதால் இயந்திரத்தின் வன்மையால் இயங்கும் பொறி
அவ் இயந்திர வன்மை தீர்ந்தவுடன் செயல் படாது நிற்றல் போல்
நிற்க; யாவரும் இன்றி - ஒருவரும் பின் தொடரும் வலிமையின்றி
அசையாது   நிற்றலால்  தனியாக;  தான் ஓர் - இராவணன் ஒரு;
சிந்துரக்  களிறு - செம்பொடியை  உடல்  முழுதும்  அணிந்த
ஆண்யானை;  கூடம்புக்கென -  கொட்டாரம் சென்று சேர்வது
போல்; கோயில்  சேர்ந்தான் -  அரண்மனையின்  உட்புறம்
சேர்ந்தான்.
 

(5)
 

இராவணன் தூதரை அழைத்து வரக் கஞ்சுகியை ஏவல்
 

7277.

ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து, இருந்து, தன்

வருத்தம் ஆறி,

நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல்

நின்றானை,

'ஈண்டு, நம் தூதர்தம்மை இவ்வழித் தருதி'

என்றான்.

பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக்

கொண்டு புக்கான்.

 

ஆண்டு-   அவ்வரண்மனையிடத்தில்; ஒரு  செம்பொன்
பீடத்து  இருந்து
-  செம்பொன்னால்  செய்யப்பட்ட  ஒப்பற்ற
பீடத்தில்  அமர்ந்து;தன்  வருத்தம் ஆறி - போரில் ஏற்பட்ட
உடல் வருத்தமும் தோல்வியால் ஏற்பட்ட மனவருத்தமும் ஓரளவு
தணிந்தவுடனே; நீண்டு உயிர் நினைப்பன்  ஆகி - இனிமேல்
செய்ய  வேண்டியதைப்  பற்றி மிகப்பெருஞ்  சிந்தனையுடையவன்
ஆகி; கஞ்சுகி  அயல்  நின்றானை - அருகில் நின்றவனாகிய
மெய்ப்பை  புக்கவனாகிய மெய்க்காப்பாளனைப் பார்த்து; ஈண்டு
- இப்போதே; நம் தூதர் தம்மை- நம் தூதுவர்களை; இவ்வழித்
தருதி  என்றான்
-  இந்த  இடத்திற்கு  அழைத்து  வா என்று
கட்டளையிட்டான்; பூண்டதோர் பணியன் வல்லை - அப்பணி