தலை மேற்கொண்ட கஞ்சுகி மேற்கொண்ட பணியினை முடித்து விரைவில்; நால்வரைக் கொண்டு புக்கான்- நான்கு தூதரை அழைத்து வந்தான். |
இப்பாடலில் உள்ள "நீண்டு உயர் நினைப்பன் ஆகி" என்ற தொடர் கவனத்தைக் கவருவது; இங்குப் பிறரிடம் கலந்து பேசுதல் இராவணனைப் பொறுத்த அளவு தன் முடிவைப் பிறர் ஏற்கச் செய்தல் என்பதற்கான சடங்காகவே அமைவதை யுணர்த்தவே கவிஞர் மேற்கண்ட தொடரைக் கையாண்டுள்ளார் போலும். |
(6) |
தூதரிடம் எண்டிசைச் சேனைகளைக் கொணரப் பணித்தல் |
| 7278. | மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று |
| இவ் |
| வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர் |
| விரவினாரை, |
| 'நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை |
| எட்டும் நீந்தி, |
| கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின்' |
| என்றான். |
| |
வினை அறி தொழிலர்- செய்யவேண்டிய செயலைச் செய்யவேண்டியவாறு செய்யும் செயல் அறிந்தவராய, மனகதி, வாயு வேகன், மருத்தன், மாமேகன் என்று இவ் - என்ற பெயருடைய இவர்கள்; முன்னை ஆயிரர் விரவினாரை - முதலாக வந்து சேர்ந்த ஆயிரக்கணக்காக வந்த தூதரை (நோக்கிய இராவணன்); நினைவதன் முன்னம்- நினைப்பு எழும் காலஅளவுக்குள்; நீர் போய் - நீங்கள் போய்; நெடுந்திசை எட்டும் நீந்தி - பெரிய எட்டுத் திசைகளையும் கடந்து; கனைகழல் அரக்கர் தானை- ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அரக்கச் சேனைகளையெல்லாம்; கடிதின் கொணருதிர் என்றான்- விரைவில் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். |
(7) |
| 7279. | 'ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும், |
| எண் இல் |
| பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த |
| பாதாளத்துள்ளும், |