| ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை |
| எல்லாம், |
| தாழ்வு இலிர் கொணர்திர்' என்றான்; அவர் அது |
| தலைமேல் கொண்டார். |
| |
ஏழ்பெருங்கடலும் சூழ்ந்த ஏழ் பெருந்தீவும் - ஏழு பெருங்கடல்களால் சூழப்பட்ட ஏழு பெரிய தீவுகளிலும்; எண் இல் பாழி அம் பொருப்பும் - எண்ணி அளவிடமுடியாத அழகிய வலிய மலைகளிலும்; கீழ் பால் அடுத்த பாதாளத்துள்ளும் - கீழே உள்ள பாதாள உலகத்திலும்; ஆழியம் கிரியின் மேலும் - சக்கரவாளம் என்ற மலையின் மீதும் உள்ள; அரக்கர்ஆனவரை எல்லாம் - எல்லா அரக்கர்களையும்; தாழ்வு இலிர் கொணர்திர் என்றான்- காலம் தாழ்த்தாது அழைத்து வாருங்கள் என்று இராவணன் கூறினான்; அவர் அது தலைமேல் கொண்டார்- அத்தூதுவர், தலைவன் கட்டளையைத் தலை மேல் கொண்டனர். |
(8) |
அமளியில் இராவணன் வருந்தி இருத்தல் |
| 7280. | மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் |
| செய்வார், |
| பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம, |
| தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் |
| கை யானை |
| சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி |
| சேர்ந்தான். |
| |
முறையில் நின்று ஏவல் செய்வார் - தங்களுக்கு உரிய முறைப்படி இட்ட ஏவலைச் செய்பவர்களாகிய; மூவகை உலகுளோரும்- விண், மண், பாதலம் என்ற மூன்று உலகத்தில் உள்ளவர்களும்; பாவகம் இன்னது என்று தெரிகிலர் - இராவணனுடைய மனக்கருத்து இதுவென அறியாதவர்களாகிப்; பதைத்து விம்ம - மனம் வருந்தி அழுது விம்ம; தூ அகலாதவைவாய் எஃகு உறத்- தசை நீங்காத கூரிய வேல் உடலில் ஆழமாகப் பாய்தலால்; தொளைக்கையானை - உட்புழை உடைய கையினையுடைய யானை; சேவகம் அமைந்தது என்ன - யானைக் |