கூடத்திற்குச் சென்று சேர்ந்ததுபோல; செறிமலர் அமளி சேர்ந்தான்- மலர் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்தான். |
பாவகம் - மனக்கருத்து. தூ - தசை. சேவகம் - யானைக் கொட்டாரம். |
(9) |
| 7281. | பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை |
| என்னும் |
| பெண் இறைகொண்ட நெஞ்சில் நாண் |
| நிறைகொண்ட பின்னர், |
| கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை |
| சுற்ற, |
| உள் நிறை மானம்தன்னை உமிழ்ந்து, எரி |
| உயிர்ப்பதானான். |
| |
பண்நிறை பவளச் செவ்வாய் - இனிய இசை போன்று பேசும் பவளம் போன்ற சிவந்த வாயினையும்; பைந்தொடி சீதை - பைம்பொன்னால் ஆன வளையல்களையும் அணிந்த சீதை; என்னும் பெண் இறை கொண்ட நெஞ்சில் - என்கின்ற பெண் தங்கி இடம் முழுதும் கொண்ட நெஞ்சத்தில்; நாண் நிறை கொண்ட பின்னர் - முதல் நாள் ஏற்பட்ட தோல்வி காரணமாகத் தோன்றிய நாணம் முழுதும் நிரம்பிய பின்னர்; கண் இறை கோடல் செய்யான் - சிறிதும் கண் துயிலாதவனாய்; கையறு கவலை சுற்ற - செயலறவும் கவலையும் சூழ; உள்நிறை மானம் தன்னை - தன் நெஞ்சில் சீதையிருந்த இடத்தில் நிரம்பிய மான உணர்வை; உமிழ்ந்து எரி உயிர்ப்பதானான் - வெளிப்படுத்த விரும்புபவன் போல் நெருப்பென பெருமூச்சு விட்டான். |
கண் இறை கோடல்-கண் சிறிதும் துயிலாமை. |
(10) |
| 7282. | வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;--நெடு |
| வயிரத் தோளான்-- |
| நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு |
| நாணான்; |
| வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், |
| மிதிலை வந்த, |
| சானகி நகுவள்--என்றே நாணத்தால் |
| சாம்புகின்றான். |