பக்கம் எண் :

780யுத்த காண்டம் 

வீரக்கழலணிந்த     இலங்கை    வேந்தனாம்   இராவணனைத்;
தாங்கிய அமளி மாட்டு- தாங்கிக் கொண்டுள்ள படுக்கையின்
பக்கத்தில்   இருந்த;  ஓர்  தவிசுடைப்பீடம்  சேர்ந்தான்-
மெத்தை இட்ட அமரும் ஆசனத்தில் அமர்ந்தான்.
 

இங்கு   மாலியவான்  இராவணன் அழைக்காமல் அவனைச்
சந்திக்க வருகிறான்.
 

(12)
 

7284.

இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த

நோக்கி,

பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும்

என்னா,

'வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;--நாளும்

வாடாப்

பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி?'

என்றான்.

 

இருந்தவன்  -  தவிசுடைப்  பீடத்தில்  இருந்தவன்  ஆகிய
மாலியவான்; இலங்கை வேந்தன்- இராவணனுடைய; இயற்கையை
எய்த  நோக்கி
  -  நிலைமையை  உற்றுப்  பார்த்து; பொருந்த
வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா
- அண்மையில்
நெருங்கி   வந்த  போரில்   இவன்  தோற்றுவிட்டான்   போலும்
என்று மனத்தில் எண்ணி; நாளும் வாடாப் பெருந்தவம் உடைய
ஐயா
- எந்நாளும்  கெடாத  பெருந்தவ ஆற்றல்  பெற்ற ஐயனே!;
மனமும்  வருந்தினை - மனம்  வருத்தமுற்றுள்ளாய்; தோளும்
வாடினை
- யார்க்கும்  தோலாத தோள்களும் வாடியுள்ளன; என்
உற்ற  பெற்றி  என்றான்
- உற்ற செயல் யாது என வாய்விட்டு
வினவினான்.
 

(13)
 

இராவணன் நிகழ்ந்தவை கூறல்
 

7285.

கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற

கண்ணன், பத்துச்

சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத்

திறந்த மூக்கன்,

நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்

சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன

சொல்லலுற்றான்;