பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 781

கவை   உறு   நெஞ்சன் - துன்பம்  மிகப்  பொருந்திய
மனத்தையும்;  காந்திக்  கனல்கின்ற  கண்ணன்- நெருப்புப்
போல்  எரிகின்ற  கண்ணினையும்;  பத்துச் சிவையின் வாய்
என்ன
  - பத்துத்   துருத்திகளின்  வாய்   போன்று; செந்தீ
உயிர்ப்பு  உறத் திறந்த மூக்கன்
- செந்தீயுடன் பெருமூச்சுக்
காற்று வெளிப்படும் விடைத்த பத்து மூக்குகளையும்; நவை அறு
பாகை அன்றி
- குற்றமில்லாத வெல்லப்பாகையன்றி; அமுதினை
நக்கினாலும்
- அமுதத்தையே நக்கி உண்டாலும்; சுவை அறப்
புலர்ந்த  நாவான்
- சுவை  முழுதும் உறைக்காதவாறு உலர்ந்த
நாவினையும்     உடையவனான     இராவணன்;   இனையன
சொல்லலுற்றான்
- (கீழ்வரும்)  இத்தகைய சொற்களைக் கூறத்
தொடங்கினான்.
 

கவை-கவ்வை. இடைக்குறை. சிவை - துருத்தி. இராவணனின்
சினமும்   சோகமும்   கலந்து   வெளிப்படுமாறு    இப்பாடல்
அமைந்துள்ளது.
 

(14)
 

7286.

'சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு

எம்மோடு

அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார்

அன்றே;

கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு

ஒவ்வாப்

பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது'

அன்றே?

 

சங்கம் வந்து உற்ற - தொகுதியாக வானரச் சேனையோடு
வந்து  சேர்ந்த;   கொற்றத்   தாபதர்-  வெற்றியுடைய தவ
வேடத்தையுடைய  இராம இலக்குவர்; தம்மோடு எம்மோடு -
தமக்கும் எமக்கும்; அங்கம் வந்து உற்றது ஆக- போர் வந்து
மூண்டபோது; அமரர் வந்து உற்றார் அன்றே- அப்போரினைக்
காணத்  தேவர்கள் வந்தார்கள் அல்லவா; கங்கம் வந்து உற்ற
செய்ய களத்து
- கழுகுகள் பறந்து வந்து நெருங்கிய குருதியால்
சிவந்த அப்போர்க்களத்தில்; நம் குலத்துக்கு ஒவ்வாப் பங்கம்
வந்து உற்றது அன்றி
- நம் அரக்கர் குலத்துக்குப் பொருந்தாத
தோல்வி வந்து பொருந்தியது அல்லாமல்;பழியும் வந்து உற்றது
- தீராத  பழியும்  வந்து பொருந்தி விட்டது  என்று இராவணன்
கூறினான்.